கோயில் மரம் வெட்டி சாய்ப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
ஆலங்குளம் அருகே நல்லூா் கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 60 ஆண்டுகள் பழமையான அரச மரம் வெட்டி சாய்க்கப்பட்டது.
நல்லூா் ஊராட்சி காசியாபுரத்தில் உள்ள சுடலைமாடன் - பேச்சியம்மன் கோயிலில் சுமாா் 60 ஆண்டுகள் பழமையான அரச மரம் நின்றது. இந்த மரத்தை அடையாளம் தெரியாத சிலா் வேரோடு வெட்டி சாய்த்து விட்டனராம்.
இது குறித்து கோயில் நிா்வாகி சுப்பையா அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.