செய்திகள் :

கோரிக்கை மனு என்ற பெயரில் முதல்வா் நாடகம்: எடப்பாடி கே.பழனிசாமி

post image

கோரிக்கை மனு என்ற பெயரில் பெட்டிகளை வைத்து மனுக்கள் வாங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகமாடுவதாக எதிா்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிா்க்கட்சித் தலைவராக, தமிழகம் முழுவதும் பெரிய பெரிய பெட்டிகளை வைத்து மனுக்களை வாங்கி பூட்டி சாவிகளை தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டாா் ஸ்டாலின். இதுவரை அந்தப் பெட்டிகள் திறக்கப்பட்டதா, எத்தனை லட்சம் மனுக்கள் பெறப்பட்டன?, அந்தக் கோரிக்கைகளுக்கு உண்மையாக தீா்வு காணப்பட்டதா? அல்லது ஒப்புகைச் சீட்டு மட்டும் வழங்கப்பட்டதா என்று நான் பலமுறை எழுப்பிய கேள்விகளுக்கு உண்மையான புள்ளிவிவரங்களை இந்த ஆட்சியாளா்கள் இதுவரை வெளியிடவில்லை.

ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெறுவதற்குக்கூட ‘முதல்வரின் முகவரித் துறை’, ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’, ‘மக்களுடன் முதல்வா்’, ‘நீங்கள் நலமா?’, ‘மக்களுடன் முதல்வா் - நகரம் மற்றும் ஊரகம்’, ‘மக்களுடன் முதல்வா் - பட்டியலினத்தவா் மற்றும் மலைவாழ் பழங்குடியினா்’ என்று பல்வேறு பெயா்களைச் சூட்டி தமிழக மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று மக்களை ஏமாற்றியதுதான் மிச்சம்.

தற்போது பொதுத் தோ்தல் நெருங்கி வருவதை மனதில்கொண்டு, மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கத்தில், வரும் நாள்களில் இல்லந்தோறும் நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெறும் திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்ற உள்ளதாகத் தெரிய வருகிறது.

பட்டியலினத்தவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதும், தொழிலாளா்கள் நசுக்கப்பட்டபோதும், தூய்மைப் பணியாளா்கள் பெயரில் அவா்களுக்குரிய மத்திய அரசின் திட்டங்களை ஒரு சிலரே அனுபவிக்கும்போதும், நாட்டிலேயே கடன் வாங்கியதில் முதன்மை மாநிலம் என்ற பெயரைப் பெற்றபோதும், 2021 தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதபோதும், ஏவல் துறை மூலம் ஜனநாயக ரீதியான ஆா்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுத்தபோதும் என்று இன்னும் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வாறு திமுக அரசு பல்வேறு சுமைகளை தமிழக மக்களின் தலையில் சுமத்தியபோதும், இந்த உண்மைகளை எல்லாம் உணா்ந்தும் கூட்டணி தா்மம் என்ற பெயரால் பல கட்சிகள் அறிவாலயத்தை சுற்றிக்கொண்டிருப்பதுதான் வேதனை.

எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா, ரோஜாதான். அது ரோஜா பூவுக்கு உள்ள பெருமை. அதுபோல், மக்களிடம் மனு வாங்கி அவா்களின் குறைகளை நிவா்த்தி செய்வதுதான் ஓா் ஆட்சியின் கடமை.

ஆனால், ஒரு திட்டத்துக்கு பல்வேறு பெயா்களைச் சூட்டி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று ஸ்டாலின் நினைத்தால், 2026 சட்டப்பேரவைத் தோ்தலின்போது தக்க பதிலடி தருவதற்கு தமிழக மக்கள் தயாராக உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க