செய்திகள் :

கோவா முதல்வரை குற்றஞ்சாட்டிய நடிகர் மீது வழக்கு!

post image

கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவாந்த் மீது குற்றம்சுமத்திய நடிகர் கௌரவ் பக்‌ஷி மீது அம்மாநில குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவா மாநிலத்தில், உச்ச நீதிமன்ற அறுவுறுத்தல்களை மீறி முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் அவரது அரசு அம்மாநிலத்தின் வனப்பகுதியை அழித்து வருவதாகக் குற்றம்சுமத்தி நடிகர் கௌரவ் பக்‌ஷி விடியோ ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மக்களிடம் அச்சத்தை உருவாக்க தவறான தகவல்களுடன் விடியோ வெளியிட்டுள்ளதாக, நடிகர் பக்‌ஷி மீது கடந்த ஜூலை 2 ஆம் தேதி துணை வனப் பாதுகாப்பாளர் ஆதித்யா மதன்பத்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்மூலம், நடிகர் பக்‌ஷி மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 353 (1) மற்றும் 196 (1) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, நடிகர் கௌரவ் பக்‌ஷி நேற்று (ஜூலை 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், காடுகள் குறைந்து வருவது குறித்து சமூக ஊடகங்களில் தான் பேசியதற்காக, தன் மீது பொய்யான மற்றும் அற்பமான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இத்துடன், கடந்த ஜூலை 4 ஆம் தேதி காவல் துறை அதிகாரிகள் எந்தவொரு காரணமும் கூறாமல், தனது வீட்டிற்கு வந்து தன்னை விசாரணைக்கு அழைத்ததாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளைக் கடந்த காலத்திலும் தான் சந்தித்தபோது நீதிமன்றங்கள் தன்னைக் காப்பாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், குற்றப்பிரிவு அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கொடுக்க மறுத்தாகக் குற்றம்சாட்டிய அவர், முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

The state's Crime Branch police have registered a case against actor Gaurav Bakshi, who has accused Goa Chief Minister Pramod Sawant.

இதையும் படிக்க: டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை!

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க