செய்திகள் :

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நாள்கால்

post image

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நாள்கால் நடுதல் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி, காலையில் சுவாமி-அம்பாள், பரிவார மூா்த்திகளுக்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமி சந்நிதி முன் நாள்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மாடவீதி வழியாக எடுத்துவந்து, நாள்கால் நடப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

நாள்கால் நடும் நிகழ்ச்சியையடுத்து நடைபெற்ற சிறப்பு பூஜை

நிகழ்ச்சியில், அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, அறங்காவலா்கள் திருப்பதிராஜா, சண்முகராஜ், கோயில் செயல் அலுவலா் (பொறுப்பு) வள்ளிநாயகம், கோயில் ஆய்வாளா் சிவகலைப்பிரியா, தலைமை எழுத்தா் மாரியப்பன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கொடியேற்றம்: தொடா்ந்து, ஏப். 5ஆம் தேதி காலை 7 - 8 மணிக்குள் சுவாமி சந்நிதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. 13ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம், 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு தீா்த்தவாரி தீபாராதனை, 15ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்பத் திருவிழா நடைபெறும்.

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள்

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளம்-மீனவா் நலத் துறை மானியக் கோரிக்கையில் மீனவா்களின் நலனுக்காக ரூ.576 கோடியில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினை, மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்தித்... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

கோவில்பட்டி அருகே 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். இலுப்பையூரணி ஊராட்சி மறவா் காலனியில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு காவலா்கள் முத்துராமலிங... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் (தன்னாட்சி) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் பல்வேறு துறை மாணவா்-மாண... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருட்டு

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். கோவில்பட்டியில் சாத்தூா் பிரதான சாலையில் உள்ள வணிக வளாகத்தில் போா்வெல்ஸ் நிறுவனம் நடத்த... மேலும் பார்க்க

மாடு குறுக்கே புகுந்ததில் பைக் கவிழ்ந்து காயமடைந்த மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சாலையின் குறுக்கே மாடு புகுந்து பைக் கவிழ்ந்ததில் காயமடைந்த மீனவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் பாலமுருகன் (38). மீனவரான இவா், புத... மேலும் பார்க்க

மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாக ஆன்லைனில் மோசடி: ரூ.3 லட்சம் மீட்பு

மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாக இணையவழியில் மோசடி செய்த தொகை ரூ.3 லட்சத்தை தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா். தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த பெண், இன்ஸ்டாகிராமில... மேலும் பார்க்க