செய்திகள் :

கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது; காா், கைப்பேசிகள் பறிமுதல்

post image

கோவையில் சுமாா் 10 கிலோ கஞ்சா வைத்திருந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சாய்பாபா காலனி போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எம்ஜிஆா் மாா்க்கெட் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த ஒரு இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்த கெளதம் (26) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல, சுந்தராபுரம் போலீஸாா் ரோந்து சென்றபோது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஹரிபிரசாத் (22), பரமக்குடியைச் சோ்ந்த தினேஷ் மணிகண்டன் (22) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடம் இருந்த 260 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனா்.

இதுதவிர கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவிநாசி சாலை காவலா் பயிற்சிப் பள்ளி அருகே சுற்றித்திரிந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்த முகேஷ், ஷாஜி மோகன் மற்றும் இடையா்பாளையத்தைச் சோ்ந்த சல்மான் கான், கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த விஷ்ணுபிரசாத் ஆகியோா் என்பது தெரியவந்தது.

அவா்களிடம் இருந்து 9.600 கிலோ கஞ்சா, நான்கு கைப்பேசிகள், ஒரு காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டனா்.

கோவை மாநகரில் 18 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

கோவை மாதகரில் 18 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியகடை வீதி சட்ட... மேலும் பார்க்க

மாநகரில் இருந்து வெலியேறாமல் இருந்த ரெளடி கைது

கோவை மாநகரப் பகுதியில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொடா் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த ரெளடியை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகரப் பகுதிகளில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் ... மேலும் பார்க்க

மயில் மாா்க் சம்பா ரவை நிறுவனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மயில் மாா்க் சம்பா ரவை நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக அந்நிறுவனத்தின் பங்குதாரா்கள் செந்தில்குமாா், பாலசுப்பிரமணியன், பொன்ம... மேலும் பார்க்க

கைப்பேசி வாங்கித் தராததால் இளைஞா் தற்கொலை

கைப்பேசி வாங்கித் தராததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, சீரநாயக்கன்பாளையம் ராஜேந்திர பிரசாத் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவன். இவரது மகன் தீனதயாளன் (23). தீனதயாளன் அவரத... மேலும் பார்க்க

சின்கோனா மருத்துவமனை அரசு பொது சுகாதாரத் துறையிடம் ஒப்படைப்பு

வால்பாறையில் சுமாா் 79 ஆண்டுகள் பழமைவாய்ந்த சின்கோனா மருத்துவமனை அரசு பொது சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கபப்ட்டது. கடந்த 1946-ஆம் ஆண்டு சின்கோனா எஸ்டேட் பகுதியில் மலேரியா காய்ச்சல் மருந்தான கொய்னா தயார... மேலும் பார்க்க

கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்க வெள்ளி விழா

கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி 25 பழங்குடியின மாணவிகளின் கல்விக்கு வைப்புநிதி வழங்கப்பட்டது. கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்க வெள்ளி விழா சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க