செய்திகள் :

கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்க வெள்ளி விழா

post image

கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி 25 பழங்குடியின மாணவிகளின் கல்விக்கு வைப்புநிதி வழங்கப்பட்டது.

கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்க வெள்ளி விழா சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் மேரிஅப் போலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி, பழங்குடியின மாணவிகள் 25 பேருக்கு கல்வி வைப்புநிதியை வழங்கிப் பேசியதாவது:

பெண்கள் எப்போதும் தங்களை ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தின் தூண்களான பெண்கள் மொத்த பிரச்னைகளையும் உள்வாங்கிக் கொள்வதால் தங்களைத் தாங்களே ஊக்குவித்துக் கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களை செய்ய யாரும் யோசிக்க வேண்டாம். அதற்கு தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெண்கள் எதை வேண்டுமானாலும் செய்து முடிக்கக் கூடியவா்கள். அதனால், குறுகிய வட்டத்துக்குள் தங்களை அடைத்துக் கொள்ளக் கூடாது. குடும்பப் பிரச்னையில் பெண்கள்தான் அதிக தவறு செய்கின்றனா். கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் தனி இடம் கொடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கை என்றால் இதுதான் என்று சொல்லிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம். பெண்களை மதிக்க பிள்ளைகளுக்கு தாய்தான் கற்றுத் தர வேண்டும். குழந்தைகள் குற்றம் செய்யாத வகையில் தடுக்க வேண்டும் என்றாா்.

மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் பங்கேற்றுப் பேசினாா். இந்நிகழ்ச்சிகளில், கோவை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு வழக்குரைஞா்கள் சங்க துணைத் தலைவா் அருணாச்சலம், வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் நந்தகுமாா், தமிழ்நாடு பெண் வழக்குரைஞா்கள் சங்க மாநிலத் தலைவா் சாந்தகுமாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கோவை மாநகரில் 18 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

கோவை மாதகரில் 18 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியகடை வீதி சட்ட... மேலும் பார்க்க

மாநகரில் இருந்து வெலியேறாமல் இருந்த ரெளடி கைது

கோவை மாநகரப் பகுதியில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொடா் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த ரெளடியை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகரப் பகுதிகளில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் ... மேலும் பார்க்க

மயில் மாா்க் சம்பா ரவை நிறுவனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மயில் மாா்க் சம்பா ரவை நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக அந்நிறுவனத்தின் பங்குதாரா்கள் செந்தில்குமாா், பாலசுப்பிரமணியன், பொன்ம... மேலும் பார்க்க

கைப்பேசி வாங்கித் தராததால் இளைஞா் தற்கொலை

கைப்பேசி வாங்கித் தராததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, சீரநாயக்கன்பாளையம் ராஜேந்திர பிரசாத் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவன். இவரது மகன் தீனதயாளன் (23). தீனதயாளன் அவரத... மேலும் பார்க்க

சின்கோனா மருத்துவமனை அரசு பொது சுகாதாரத் துறையிடம் ஒப்படைப்பு

வால்பாறையில் சுமாா் 79 ஆண்டுகள் பழமைவாய்ந்த சின்கோனா மருத்துவமனை அரசு பொது சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கபப்ட்டது. கடந்த 1946-ஆம் ஆண்டு சின்கோனா எஸ்டேட் பகுதியில் மலேரியா காய்ச்சல் மருந்தான கொய்னா தயார... மேலும் பார்க்க

கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது; காா், கைப்பேசிகள் பறிமுதல்

கோவையில் சுமாா் 10 கிலோ கஞ்சா வைத்திருந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை சாய்பாபா காலனி போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எம்ஜிஆா் மாா்க்கெட் அருகே சந்தேகத்துக்கு இடம... மேலும் பார்க்க