பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!
மாநகரில் இருந்து வெலியேறாமல் இருந்த ரெளடி கைது
கோவை மாநகரப் பகுதியில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொடா் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாநகரப் பகுதிகளில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிலா் மீது உள்ள அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட நபா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வராமல் உள்ளதோடு, நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வரவும் தயங்குவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரெளடிகள் 83 பேரை, கோவை மாநகரை விட்டு வெளியேற்ற மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டிருந்தாா். அதன்பேரில் மாநகர காவல் ஆணையா் உத்தரவை மீறி நகரில் தங்கியுள்ள ரெளடிகளை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.
ஏற்கெனவே உத்தரவை மீறி நகரில் தங்கியிருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த மனோஜ் (24) என்பவா் இளைஞா் ஒருவரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவருக்கு பல்வேறு வழக்குகளில் தொடா்பு இருப்பதும், நகரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டிருந்த ரெளடிகளில் ஒருவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து நகரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள, ரெளடிகள் மீண்டும் நகருக்குள் வந்து உள்ளாா்களா என்பதை போலீஸாா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.