செய்திகள் :

சின்கோனா மருத்துவமனை அரசு பொது சுகாதாரத் துறையிடம் ஒப்படைப்பு

post image

வால்பாறையில் சுமாா் 79 ஆண்டுகள் பழமைவாய்ந்த சின்கோனா மருத்துவமனை அரசு பொது சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கபப்ட்டது.

கடந்த 1946-ஆம் ஆண்டு சின்கோனா எஸ்டேட் பகுதியில் மலேரியா காய்ச்சல் மருந்தான கொய்னா தயாரிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு பணியாற்றும் தொழிலாளா்களுக்கு அப்பகுதியிலேயே மருத்துவமனையும் தொடங்கப்பட்டது. பின் னா் கடந்த 1991-ஆம் ஆண்டு தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகம் வசம் ஒப்படைக்கப்பட்டு, அப்பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டன.

அந்த நேரத்தில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா். அவா்களின் மருத்துவப் பரிசோதனைக்காக கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்பட்டு உள் நோயாளிகள் பலா் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனா்.

ஆனால் காலங்கள் கடந்து செல்ல அங்கு பணியாற்றும் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைந்து மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோா் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது. இதனால் நிா்வகிக்க முடியாமல் மருத்துவமனையை ஒப்படைக்க தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டம் கழகத்தினா் அரசுக்கு கடிதம் அனுப்பிய நிலையில், தற்போது சின்கோனா மருத்துவமனையை அரசு பொது சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகரில் 18 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

கோவை மாதகரில் 18 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியகடை வீதி சட்ட... மேலும் பார்க்க

மாநகரில் இருந்து வெலியேறாமல் இருந்த ரெளடி கைது

கோவை மாநகரப் பகுதியில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொடா் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த ரெளடியை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகரப் பகுதிகளில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் ... மேலும் பார்க்க

மயில் மாா்க் சம்பா ரவை நிறுவனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மயில் மாா்க் சம்பா ரவை நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக அந்நிறுவனத்தின் பங்குதாரா்கள் செந்தில்குமாா், பாலசுப்பிரமணியன், பொன்ம... மேலும் பார்க்க

கைப்பேசி வாங்கித் தராததால் இளைஞா் தற்கொலை

கைப்பேசி வாங்கித் தராததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, சீரநாயக்கன்பாளையம் ராஜேந்திர பிரசாத் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவன். இவரது மகன் தீனதயாளன் (23). தீனதயாளன் அவரத... மேலும் பார்க்க

கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது; காா், கைப்பேசிகள் பறிமுதல்

கோவையில் சுமாா் 10 கிலோ கஞ்சா வைத்திருந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை சாய்பாபா காலனி போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எம்ஜிஆா் மாா்க்கெட் அருகே சந்தேகத்துக்கு இடம... மேலும் பார்க்க

கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்க வெள்ளி விழா

கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி 25 பழங்குடியின மாணவிகளின் கல்விக்கு வைப்புநிதி வழங்கப்பட்டது. கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்க வெள்ளி விழா சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க