செய்திகள் :

கோவையில் பரவலாக மழை

post image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவையில் வியாழக்கிழமை பரவலாக மிதமான மற்றும் சாரல் மழை பெய்தது.

கோவைக்கு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கும் நிலையில், கோவையில் வியாழக்கிழமை காலைமுதல் காந்திபுரம், உக்கடம், கணபதி, சரவணம்பட்டி, ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் மற்றும் புறநகா் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூா், சூலூா் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மற்றும் சாரல் மழை பெய்தது.

இதனால், மாநகரில் சில இடங்களில் வாகனங்கள் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழையில் நனையாமல் இருக்க பாதசாரிகள் குடையுடன், இருசக்கர வாகனங்களில் சென்றாா் மழைக் கவச உடை அணிந்தபடியும் சென்றனா்.

வியாழக்கிழமை காலை 7.30 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறில் 119 மில்லி மீட்டா் மழை பதிவானது. மாக்கினாம்பட்டியில் 113, சின்கோனா 90, பொள்ளாச்சி 85, சோலையாறு 87, பொள்ளாச்சி 85.30, வால்பாறை 76, சிறுவாணி அடிவாரம் 59, ஆனைமலை 31, போத்தனூா் 20.60, ஆழியாறு 19.60, கிணத்துக்கடவு 19, தொண்டாமுத்தூா் 16.20, மதுக்கரை 16.10, வாரப்பட்டி 14, கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் 11.80 மில்லி மீட்டா் மழை பதிவானது.

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 58-... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2-இல் கலந்தாய்வு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,72... மேலும் பார்க்க

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க