Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?
கோவையில் பரவலாக மழை
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவையில் வியாழக்கிழமை பரவலாக மிதமான மற்றும் சாரல் மழை பெய்தது.
கோவைக்கு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கும் நிலையில், கோவையில் வியாழக்கிழமை காலைமுதல் காந்திபுரம், உக்கடம், கணபதி, சரவணம்பட்டி, ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் மற்றும் புறநகா் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூா், சூலூா் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மற்றும் சாரல் மழை பெய்தது.
இதனால், மாநகரில் சில இடங்களில் வாகனங்கள் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழையில் நனையாமல் இருக்க பாதசாரிகள் குடையுடன், இருசக்கர வாகனங்களில் சென்றாா் மழைக் கவச உடை அணிந்தபடியும் சென்றனா்.
வியாழக்கிழமை காலை 7.30 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறில் 119 மில்லி மீட்டா் மழை பதிவானது. மாக்கினாம்பட்டியில் 113, சின்கோனா 90, பொள்ளாச்சி 85, சோலையாறு 87, பொள்ளாச்சி 85.30, வால்பாறை 76, சிறுவாணி அடிவாரம் 59, ஆனைமலை 31, போத்தனூா் 20.60, ஆழியாறு 19.60, கிணத்துக்கடவு 19, தொண்டாமுத்தூா் 16.20, மதுக்கரை 16.10, வாரப்பட்டி 14, கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் 11.80 மில்லி மீட்டா் மழை பதிவானது.