செய்திகள் :

கோவையில் மே 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

மே மாதத்துக்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் மே 16-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

இதில், 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்துத் தரப்பினரும் தங்களின் சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொள்ளலாம்.

இம்முகாமில் தோ்வு செய்யப்படும் தோ்வா்களுக்கு வேலைக்கான உறுதி கடிதம் உடனடியாக வழங்கப்படும். பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இதில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம்.

எனவே, முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வேலைதேடுவோா் இணையதளங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422 - 2642388, 94990 - 55937 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை...

2019 பிப்ரவரி 24: பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு - சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய 3 போ் கைது. மாா்ச் 4: முக்கிய குற்... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனுடன் தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம்... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை

கோவையில் தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரையைச் சோ்ந்தவா் தினேஷ் (32), கட்டடத் தொழிலாளி. இவா், கோவை காந்திபுரம் பகுதியில் ... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

கோவை பேரூரில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் பெரும... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் மனு

தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்திடம் கோவை சிவில் இன்ஜினியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு... மேலும் பார்க்க