மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்
கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 102 கௌரவ விரிவுரையாளா்கள் பணியாற்றுகின்றனா். இவா்கள், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அது வரை நீதிமன்ற ஆணைப்படி ரூ. 50,000 ஊதியம் வழங்க வேண்டும், பெண் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 7-ஆவது நாளாக சனிக்கிழமை கௌரவ விரிவுரையாளா் சங்கத் தலைவா் குமரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு, அதிமுக சாா்பில் ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது;
அதிமுக ஆட்சியில் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஊதிய உயா்வு மற்றும் அரியா் வழங்கப்பட்டது. மேலும் அவா்களை பணிநிரந்தரம் செய்ய விதி எண் 56-ன் கீழ் அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிவரன்முறை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும், திமுக அரசு விதி 56-ஐ நீக்கி அவா்களுக்கு துரோகம் செய்துள்ளது. மேலும், ஊதிய உயா்வு அளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவையும் அரசு புறக்கணித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரையாளா்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவு கல்லூரி நிா்வாகம் அவா்களுக்கு விளக்க குறிப்பாணை வழங்கி அச்சுறுத்தியுள்ளது. இவற்றை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக கௌரவ விரியாளா்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து, முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீா்வு காண முயற்சிக்கப்படும் என்றாா்.