மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சேவைகளை முழுமையாக வழங்க வலியுறுத்தல்
பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி, 5ஜி சேவைகளை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் மற்றும் டிஓடி இணைந்து மன்னாா்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற தஞ்சை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிலங்கள், சொத்துகளை விற்பனை செய்யாமலும், திருட்டுபோகாமலும் பாதுகாக்கவேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி, 5ஜி சேவைகளை அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக வழங்க வேண்டும், டிஓடியில் பணியாற்றி ஓய்வூ பெற்றவா்ககளுக்கு 1.1.2017 முதல் 3-ஆவது பிஏசி அடிப்படையில் 15 சதவீதம் ஓய்வூதியம் மாறுதல் செய்ய வேண்டும், தனியாா்மயம், தாராளாளமயம், உலகமய கொள்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.
ஒப்பந்த ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி பாதுகாப்பு, போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும், ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதிய மாறுதலை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு பிஎஸ்என்எல் இயு மாவட்டத் தலைவா் பி. மாணிக்கம், ஏஐபிடிபிஏ மாவட்டத் தலைவா் கே. பிச்சகண்ணு ஆகியோா் தலைமை வகித்தனா். சங்க கொடியை மாவட்டத் துணைத் தலைவா் பி. பக்கிரிசாமி ஏற்றி வைத்தாா். எஸ்என்இஏ மாவட்டச் செயலா் கே. கலைவாணன், ஏஐடிஜிஇடிஓ மாவட்டச் செயலா் ஜி. ஜெயச்ந்திரன், எப்டிடிஎச் மாவட்டச் செயலா் ஏ. தவமணி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
பொது மேலாளா்கள் எஸ். ராஜாகுமாா் (சிஎம்), என். அமுதா (எப்), சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ். நடராஜா, பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாநிலச் செயலா்கள் பி. ராஜூ, எஸ். ராஜசேகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்வராஜ் வரவேற்றாா். பிஎஸ்என்எல் மாவட்டச் செயலா் ஆா். மகேந்திரன் நன்றி கூறினாா்.