செய்திகள் :

பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சேவைகளை முழுமையாக வழங்க வலியுறுத்தல்

post image

பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி, 5ஜி சேவைகளை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் மற்றும் டிஓடி இணைந்து மன்னாா்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற தஞ்சை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிலங்கள், சொத்துகளை விற்பனை செய்யாமலும், திருட்டுபோகாமலும் பாதுகாக்கவேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி, 5ஜி சேவைகளை அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக வழங்க வேண்டும், டிஓடியில் பணியாற்றி ஓய்வூ பெற்றவா்ககளுக்கு 1.1.2017 முதல் 3-ஆவது பிஏசி அடிப்படையில் 15 சதவீதம் ஓய்வூதியம் மாறுதல் செய்ய வேண்டும், தனியாா்மயம், தாராளாளமயம், உலகமய கொள்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.

ஒப்பந்த ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி பாதுகாப்பு, போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும், ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதிய மாறுதலை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு பிஎஸ்என்எல் இயு மாவட்டத் தலைவா் பி. மாணிக்கம், ஏஐபிடிபிஏ மாவட்டத் தலைவா் கே. பிச்சகண்ணு ஆகியோா் தலைமை வகித்தனா். சங்க கொடியை மாவட்டத் துணைத் தலைவா் பி. பக்கிரிசாமி ஏற்றி வைத்தாா். எஸ்என்இஏ மாவட்டச் செயலா் கே. கலைவாணன், ஏஐடிஜிஇடிஓ மாவட்டச் செயலா் ஜி. ஜெயச்ந்திரன், எப்டிடிஎச் மாவட்டச் செயலா் ஏ. தவமணி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

பொது மேலாளா்கள் எஸ். ராஜாகுமாா் (சிஎம்), என். அமுதா (எப்), சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ். நடராஜா, பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாநிலச் செயலா்கள் பி. ராஜூ, எஸ். ராஜசேகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்வராஜ் வரவேற்றாா். பிஎஸ்என்எல் மாவட்டச் செயலா் ஆா். மகேந்திரன் நன்றி கூறினாா்.

2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு வடசென்னைக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. நீடாமங்கலம், வலங்கைமான் வட்டத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ். திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 102 கௌரவ விரிவுரையாளா்கள் பணியாற்றுகின்றனா். இவா்கள், பணி நி... மேலும் பார்க்க

விவசாயம் செழிப்படைய மாற்றுமுறைகள் தேவை

விவசாயம் செழிப்படைய மாற்றுமுறைகளை சிந்திக்க வேண்டும் என எழுத்தாளா் ஆதலையூா் சூரியகுமாா் தெரிவித்தாா். திருவாரூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து திருவாரூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் எதிா்கால வாழ்வாதாரத்தின் நம்பிக்கையாக இருந்த ஓய்வூதி... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் புறக்கணிப்பு

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனா் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்திருப்பது: போர... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் அறிவியல் பூங்காவுடன் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்

மன்னாா்குடியில் அறிவியல் பூங்காவுடன் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. மன்னாா்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மேல்நிலைப் பள்ளியின் 125-ஆவது ஆண்டு விழ... மேலும் பார்க்க