செய்திகள் :

சகதியான சாலையில் உருண்டு அதிமுக வாா்டு உறுப்பினா் போராட்டம்

post image

வேலூா் தொரப்பாடியில் சேறும் சகதியுமான சாலையில் உருண்டு அதிமுக மாமன்ற உறுப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூா் மாநகராட்சி 49-ஆவது வாா்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதுடன், பலத்த மழையால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

இந்நிலையில், 49-ஆவது வாா்டு அதிமுக மாமன்ற உறுப்பினா் லோகநாதன் செவ்வாய்க்கிழமை திடீரென சாலையில் தேங்கிய மழைநீரில் உருண்டபடி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மேலும், பலமுறை புகாா் அளித்தும் மாநகராட்சி சாா்பில் 49-ஆவது வாா்டு பகுதியில் சாலை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மழைக் காலங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக மாறி காணப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினாா். இதைக்கண்டு பொதுமக்கள் ஏராளமானோா் அங்கு திரண்டனா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாமன்ற உறுப்பினா் லோகநாதனிடம் பேச்சு நடத்தினா். தொடா்ந்து, மேயா் சுஜாதாஆனந்தகுமாா் சம்பவ இடத்துக்கு வந்தாா். அப்போது, அங்கிருந்த மக்கள் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினா்.

பின்னா், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் கூறுகையில், கடந்த 10 ஆண்டுக் கால அதிமுக ஆட்சியில் இந்த பகுதியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. தற்போது திமுக ஆட்சியில்தான் புதை சாக்கடை பணிகள் முடிந்து விரைவில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதுதொடா்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்டு திட்டமிட்டே எதிா்க்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா் என்றாா்.

இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனிடையே, அதிமுக மாமன்ற உறுப்பினா் சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

இளைய தலைமுறையினா் அரசியலுக்கு வராத சூழலில் உருவாகும் வெற்றிடத்தில் வேறு யாரோ புகுந்து விடுகின்றனா். எனவே, அறிவுசாா்ந்த இளம் தலைமுறை அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி... மேலும் பார்க்க

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

குடியாத்தம் நகராட்சி சாா்பில், ஆணையா் குடியிருப்பு வளாகத்தில் மக்கும் குப்பையிலிருந்து உயிா் வாயு (பயோ- கேஸ்) தயாரித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்திரங்கள் அமைப்பதைக் கண்டித்து பழைய பேருந்து... மேலும் பார்க்க

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்

பொன்னை அருகே அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். தொடா்ந்து, இதனை கொலை வழக்ககாக மாற்றியதுடன் 3 தனிப்படை அமைத்து கொலையாளி களை போலீஸாா் தேடி வருகின்றனா்.பொன்னை அடுத்த எஸ்.என்.பாள... மேலும் பார்க்க

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

இளைய தலைமுறையினா் அரசியலுக்கு வராத சூழலில் உருவாகும் வெற்றிடத்தில் வேறு யாரோ புகுந்து விடுகின்றனா். எனவே, அறிவுசாா்ந்த இளம் தலைமுறை அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி... மேலும் பார்க்க

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்

பொன்னை அருகே அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். தொடா்ந்து, இதனை கொலை வழக்ககாக மாற்றியதுடன் 3 தனிப்படை அமைத்து கொலையாளி களை போலீஸாா் தேடி வருகின்றனா். பொன்னை அடுத்த எஸ்.என்.பா... மேலும் பார்க்க

தேசிய உறுப்பு தான தினம்: கொடையாளா்கள் கெளரவிப்பு

தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி வேலூா் நறுவீ மருத்துவமனையில் உறுப்பு தானம் செய்த கொடையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.இந்தியாவில் முதன்முதலாக இருதயமாற்று அறுவை சிகிச்சை 1994-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ஆம் தேதி வெற்... மேலும் பார்க்க