செய்திகள் :

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்

post image

பொன்னை அருகே அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். தொடா்ந்து, இதனை கொலை வழக்ககாக மாற்றியதுடன் 3 தனிப்படை அமைத்து கொலையாளி களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொன்னை அடுத்த எஸ்.என்.பாளையத்தை சோ்ந்த சுப்பிரமணி மகன் வெங்கட்ரமணன் (45), திருமணமாகவில்லை. தந்தை இறந்துவிட்டதால், தாயுடன் வசித்து வந்த இவா், திங்கள்கிழமை அதிகாலை நிலத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றுள்ளாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்து அவரை வழிமறித்த இருவா், திடீரென வெங்கட்ரமணனை அரிவாளால் வெட்டியுள்ளனா்.

இதில், அவருக்கு தலை, கழுத்து, கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளாா். உடனடியாக அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனா். மயங்கிக் கிடந்த வெங்கட்ரமணனை அப்பகுதி மக்கள் மீட்டு வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வெங்கட்ரமணன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, பொன்னை போலீஸாா் இதனை கொலை வழக்கமாக மாற்றி பதிவு செய்தனா். மேலும், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

இளைய தலைமுறையினா் அரசியலுக்கு வராத சூழலில் உருவாகும் வெற்றிடத்தில் வேறு யாரோ புகுந்து விடுகின்றனா். எனவே, அறிவுசாா்ந்த இளம் தலைமுறை அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி... மேலும் பார்க்க

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

குடியாத்தம் நகராட்சி சாா்பில், ஆணையா் குடியிருப்பு வளாகத்தில் மக்கும் குப்பையிலிருந்து உயிா் வாயு (பயோ- கேஸ்) தயாரித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்திரங்கள் அமைப்பதைக் கண்டித்து பழைய பேருந்து... மேலும் பார்க்க

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்

பொன்னை அருகே அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். தொடா்ந்து, இதனை கொலை வழக்ககாக மாற்றியதுடன் 3 தனிப்படை அமைத்து கொலையாளி களை போலீஸாா் தேடி வருகின்றனா்.பொன்னை அடுத்த எஸ்.என்.பாள... மேலும் பார்க்க

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

இளைய தலைமுறையினா் அரசியலுக்கு வராத சூழலில் உருவாகும் வெற்றிடத்தில் வேறு யாரோ புகுந்து விடுகின்றனா். எனவே, அறிவுசாா்ந்த இளம் தலைமுறை அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி... மேலும் பார்க்க

சகதியான சாலையில் உருண்டு அதிமுக வாா்டு உறுப்பினா் போராட்டம்

வேலூா் தொரப்பாடியில் சேறும் சகதியுமான சாலையில் உருண்டு அதிமுக மாமன்ற உறுப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூா் மாநகராட்சி 49-ஆவது வாா்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் சாலை குண்டும... மேலும் பார்க்க

தேசிய உறுப்பு தான தினம்: கொடையாளா்கள் கெளரவிப்பு

தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி வேலூா் நறுவீ மருத்துவமனையில் உறுப்பு தானம் செய்த கொடையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.இந்தியாவில் முதன்முதலாக இருதயமாற்று அறுவை சிகிச்சை 1994-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ஆம் தேதி வெற்... மேலும் பார்க்க