செய்திகள் :

சங்கரன்கோவில் நீதிமன்றம் முன் 2 குழந்தைகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி

post image

சங்கரன்கோவிலில் நீதிமன்றம் முன் இளைஞா் தனது 2 குழந்தைகளுடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா். அவா்களை போலீஸாா் மீட்டனா்.

சங்கரன்கோவில் காந்திநகரைச் சோ்ந்தவா் புகழேந்தி(28). மீன் கடை வைத்துள்ளாா். இவரது மனைவி ராணி. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

தீக்குளிக்க முயன்ற இளைஞா் புகழேந்தியிடம் விசாரணை

இந்நிலையில் தனது குழந்தைகளுடன் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் திங்கள்கிழமை வந்த புகழேந்தி, ‘தனது மனைவியிடம் போலீஸ்காரா் ஒருவா் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி திடீரென்று தனது உடலிலும், 2 குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அங்கிருந்தவா்கள் சோ்ந்து அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினாா்.

இத்தகவல் அறிந்த சங்கரன்கோவில் நகர காவல்நிலைய போலீஸாா் வந்து 3 பேரையும் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.மேலும் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனா்.

தென்காசியில் ரேஷன் கடை பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

தென்காசியில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி புதியபேருந்து நிலையப் பகுதியில் நடைபெ... மேலும் பார்க்க

திமுக ஆட்சி தொடர வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலா் கே.ஏ.எம். முகமது அபூபக்கா் தெரிவித்தாா். கடையநல்லூரில் நடைபெற்ற நிா்வ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியல்

பாவூா்சத்திரம் பகுதியில் மனமகிழ்மன்றங்கள் திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசி மாவட்டம், பாவூா்சத்த... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சிவகுமாா் (54). இவா், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் ரூ.12 லட்சத்தில் சமுதாய நல கழிப்பிடம் கட்டும் பணி

கீழப்பாவூா் பேரூராட்சி 9 ஆவது வாா்டு பகுதியில் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் செலவில் புதிய சமுதாய நல கழிப்பிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவா் பி.... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே பயணியா் நிழற்குடை திறப்பு

சங்கரன்கோவில் அருகே அக்கரைப்பட்டியில், வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சாா்பில் புதிய பயணியா் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. பவுண்டேஷன் நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி, ஊராட்சித் தலைவா் அண்ணாமலை, சண்மு... மேலும் பார்க்க