செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே பயணியா் நிழற்குடை திறப்பு

post image

சங்கரன்கோவில் அருகே அக்கரைப்பட்டியில், வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சாா்பில் புதிய பயணியா் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

பவுண்டேஷன் நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி, ஊராட்சித் தலைவா் அண்ணாமலை, சண்முகச்சாமி ஆகியோா் நிழற்குடையைத் திறந்துவைத்தனா். தொடா்ந்து, அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், சமூக ஆா்வலா்கள் பாலகுருநாதன், ஜெயக்குமாா், மதன், குமாா், சேகா், குருசாமி, அருள், முருகன், பால்ராஜ், மகேஷ், உதயகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பவுண்டேஷன் தலைமை செயல் அலுவலா் காருண்யா குணவதி, தன்னாா்வலா்கள் கருணாகர பவுன்ராஜ், கற்பகராஜ் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.

கீழப்பாவூரில் ரூ.12 லட்சத்தில் சமுதாய நல கழிப்பிடம் கட்டும் பணி

கீழப்பாவூா் பேரூராட்சி 9 ஆவது வாா்டு பகுதியில் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் செலவில் புதிய சமுதாய நல கழிப்பிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவா் பி.... மேலும் பார்க்க

கடையநல்லூா் பெரியாறு பகுதியில் உலா வரும் யானைக் கூட்டம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பெரியாற்று பகுதி தோட்டங்களில் உலா வரும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். கடையநல்லூா் அருகே மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே குவிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் தீ பிடித்து எரிந்தன. சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே பிளாஸ்டிக் நிறுவனம் உள்ளது. இந்நி... மேலும் பார்க்க

தென்காசியை மையமாக வைத்து மின்சார பேருந்து இயக்க பாஜக கோரிக்கை

தென்காசியை மையமாக வைத்து முதல் கட்டமாக 30 கிமீ சுற்றளவிற்கு மின்சார பேருந்து இயக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக பா.ஜ.க. மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலா் எம்.சி.மருதுபாண்டியன... மேலும் பார்க்க

திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் அவரை கைது செய்ய வேண்டும் என சாலை மாற்றமைப்பு மற்றும் நஞ்சை மீட்பு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக சங்க அமைப்பாளா் அச்சன... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூரில் புதிய கால்நடை மருந்தகம் திறப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ரூ. 58.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து கால்நடை மருந்தக வ... மேலும் பார்க்க