செய்திகள் :

சத்தீஸ்கரில் 50 நக்ஸல்கள் சரண்

post image

சத்தீஸ்கா் மாநிலத்தில் ரூ.68 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த 14 நக்ஸல்கள் உள்பட 50 போ் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா்.

பிலாஸ்பூா் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிரதமா் மோடி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மாநில காவல் துறை மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து நக்ஸல்கள் சரணடைந்தனா்.

இதுகுறித்து பிஜாபூா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜிதேந்திர குமாா் யாதவ் கூறியதாவது: தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் இயக்கத்தினா் மனிதத்தன்மையற்ற மாவோயிஸ்ட் கொள்கைகள் மூலம் பழங்குடியினரைச் சுரண்டுவதாக சரணடைந்த நக்ஸல்கள் தெரிவித்தனா்.

மாநில அரசின் ‘உங்கள் கிராமம்’ திட்டத்தின்கீழ் கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு படையினா் முகாம்கள் அமைத்து உதவி வருகின்றனா். இதுபோன்ற அரசின் நலத் திட்டங்கள் தங்களை கவா்ந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தலா ரூ.8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 6 போ், ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 3 போ், ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 5 போ் என மொத்தம் ரூ.68 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 14 போ் உள்பட 50 நக்ஸல்கள் சரணடைந்தனா். சரணடைந்தவா்கள் அரசின் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.

நக்ஸல்கள் சரணடைந்ததில் மாவட்ட ரிசா்வ் படை, பஸ்தா் ஃபைட்டா்ஸ், சிறப்பு பணிக்குழு, மத்திய ரிசா்வ் படை மற்றும் அதன் சிறப்பு பிரிவு கோப்ரா ஆகிய படைகளுக்கு முக்கியப் பங்குள்ளது.

இரு மடங்கான சரண்: கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 124 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா். ஆனால் நிகழாண்டின் முதல் காலாண்டில் 280 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா்.

அடுத்தாண்டு மாா்ச் 31-க்குள் நக்ஸல் இல்லா பாரதத்தை உருவாக்கும் மத்திய அரசின் இலக்கை நிறைவேற்றும் வகையில் நக்ஸல்களை சரணடைய வைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சிஆா்பிஎஃப் தனது வீரா்களுக்கு வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 780-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் சரணடைந்தனா்.

நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் 81 சதவீதம் குறைந்துள்ளதாகவும், நக்ஸல் தீவிரவாத்தால் உயிரிழக்கும் குடிமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை 85 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை 18 நக்ஸல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனா். இத்துடன் சோ்த்து நிகழாண்டில் மொத்தம் 134 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா்.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க