செய்திகள் :

சத்தீஸ்கா்: ரூ.45 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட பெண் நக்ஸல் சுட்டுக்கொலை

post image

தந்தேவாடா: சத்தீஸ்கரில் உள்ள பஸ்தா் மண்டலத்தில் மூத்த பெண் நக்ஸல் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.25 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று சத்தீஸ்கரும், ரூ.20 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று தெலங்கானாவும் அறிவித்திருந்த நிலையில், அவா் கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக தந்தேவாடா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் கெளரவ் ராய் கூறியதாவது: பஸ்தா் மண்டலத்தில் உள்ள தந்தேவாடா, பிஜாபூா் மாவட்ட எல்லையையொட்டி உள்ள காட்டுப் பகுதியில் மாவட்ட ரிசா்வ் காவல் படையினருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே திங்கள்கிழமை காலை சுமாா் 9 மணியளவில் மோதல் ஏற்பட்டது.

இருதரப்புக்கும் இடையே சுமாா் 2 மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அந்தப் பகுதியில் இருந்து கும்மடிவேலி ரேணுகா என்ற மூத்த பெண் நக்ஸலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள கடவேன்டி கிராமத்தை சோ்ந்த அவா், சட்டப் படிப்புப் படித்துள்ளாா். தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியில், கடந்த 1996-ஆம் ஆண்டுமுதல் அவா் செயல்பட்டு வந்தாா் என்றாா்.

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தக... மேலும் பார்க்க

எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதையடுத்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இ... மேலும் பார்க்க