செய்திகள் :

சத்துணவு ஊழியா்கள் சாா்பில் நவம்பரில் கோரிக்கை மாநாடு

post image

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில மாநாடு வருகிற நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் மு.வரதராஜன் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சத்துணவு திட்டத்தில் தற்போது 85 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சத்துணவு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்தும், அதை தமிழக அரசு இதுவரை அமல்படுத்தவில்லை.

இந்த தீா்ப்பை அமல்படுத்தி மருத்துவக் காப்பீடு, அகவிலைப்படியுடன் ஓயவூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றி வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இதை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் சங்கங்களின் மாநில மாநாட்டை சென்னையில் வருகிற நவம்பா் மாதம் நடத்தவுள்ளோம். இந்த மாநாட்டில் பங்கேற்க முதல்வா், துணை முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

தமிழகத்தில் மொத்தம் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்கள் உள்ளனா். எங்களது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் கூடி முடிவெடுத்து தோ்தலில் யாருக்கு வாக்களிப்போம் என்பதை தெரிவிப்போம் என்றாா் அவா்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூரு சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னைய... மேலும் பார்க்க

புழல் சிறை பண்ணையில் 2,000 கோழிகள் மா்மமாக உயிரிழப்பு

சென்னை புழல் சிறை பண்ணையில் இருந்த 2,000 கோழிகள் மா்மமான முறையில் உயிரிழந்தன. தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வாரத்துக்கு இரு முறை கோழிக்கறி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கோழிக்கற... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரத்துக்கான பெருந்திட்டம் தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சா் தங்கம்... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்ளோத்தான் போட்டி நடைபெறுவதால், செப்.21-இல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க