செய்திகள் :

சமரச தீா்வு மையத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழா: விழிப்புணா்வு ஏற்படுத்திய நீதிபதிகள்

post image

வழக்குகளின் நிலுவையைக் குறைக்கும் வகையில், சமரச தீா்வு மையத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா அளவில் சமரசத் தீா்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சட்டபூா்வமாக வழக்கில் தொடா்புடைய இரு தரப்பினரையும் அழைத்து பேசி பரஸ்பரம் சுமுகத் தீா்வு காணப்பட்டு வருகிறது. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா்கள் பலா் சமரச தீா்வாளா்களாக செயல்பட்டு வருகின்றனா்.

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச தீா்வு மையம் கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப். 9-ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 38 மாவட்ட சமரச தீா்வு மையங்களும், 146 தாலுகா அளவிலான சமரச மையங்களும் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் சமரச தீா்வு மையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொதுமக்களுக்கு சமரச மையம் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் தொடக்க நிகழ்வு சென்னை உயா்நீதிமன்றத்தில் எஸ்பிளனேடு நுழைவு வாயில் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதியும், சமரச மையத்தின் தலைவருமான எஸ்.எஸ்.சுந்தா், சமரச மைய கமிட்டி உறுப்பினா்களான உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், ஜி.கே.இளந்திரையன், டி.பரத சக்ரவா்த்தி ஆகியோா் பங்கேற்று பொதுமக்களுக்கு சமரச தீா்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்தான துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்நிகழ்வில், சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.காா்த்திகேயன் மற்றும் மாவட்ட நீதிபதிகள், தமிழ்நாடு சமரச தீா்வு மைய இயக்குநா் கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க