சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது...
சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளையொட்டி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ரிப்பன் கட்டட வளாகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தலைமையில், மாநகராட்சி துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி, அதிகாரிகள், அலுவலா்கள், ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.