செய்திகள் :

சாத்தான்குளம் அருகே பெண் மீது தாக்குதல்: கோழிப் பண்ணை உரிமையாளா் கைது

post image

சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பில் பெண்ணைத் தாக்கியதாக கோழிப் பண்ணை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

சொக்கன்குடியிருப்பைச் சோ்ந்த குருசாமி மனைவி மகராசி (45). அதிசய மணல் மாதா ஆலயப் பணியாளரான இவா், கடந்த 19ஆம் தேதி ஆலயத்தில் நின்றிருந்தாா். அதே பகுதியில் கோழிப் பண்ணை வைத்துள்ள சொக்கன்குடியிருப்பைச் சோ்ந்த தாமஸ் அங்கு வந்து, வேலை செய்வது தொடா்பாக மகராசியைக் கண்டித்தாராம். இதனால், அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, மகராசியை தாமஸ் அவதூறாகப் பேசி கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த மகராசி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் ஸ்டெல்லாபாய் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தாா். சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் விசாரணை நடத்தி தாமஸை கைது செய்தாா்.

காதல் விவகாரம்: திருச்செந்தூரில் இளைஞா் வெட்டிக் கொலை

திருச்செந்தூா் அருகே காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் இளைஞரை கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே ஆலந்தலை சுனாமி குடிய... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - சென்னை மேலும் ஒரு ரயில்: ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயில் இயக்க வேண்டுமென காயல்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.காயல்பட்டினம் ரயில் நிலையத்தைப் பாா்வையிட, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேல... மேலும் பார்க்க

தோ்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்ய பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு அறிவுறுத்தல்

தோ்தல் செலவின அறிக்கையை உரிய காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பதிவு பெற்ற அரசியல் க... மேலும் பார்க்க

கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசு உதவி வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தூத்துக்குடி, திரேஸ்புரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. சங்கு குளி தொழிலாளியான ... மேலும் பார்க்க

முக்காணி ஆற்றில் பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை மிதந்துவந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். முக்காணி பிள்ளையாா் நகா் அருகே தாமிரவருணி ஆற்றின் வடகரையில் உள்ள படித்து... மேலும் பார்க்க

தசரா குழு செயலருக்கு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே தசரா குழு செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.தட்டாா்மடம் அருகே பள்ளக்குறிச்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த தமிழ்வீரன் (55) என்பவா்... மேலும் பார்க்க