செய்திகள் :

சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம்

post image

வெயிலின் தாக்கம் குறைய வேண்டி, ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

லெட்சுமாங்குடி மரக்கடை ஷீரடி சாய்பாபா கோயில் நிறுவனா் வெள்ளையன் ஏற்பாட்டில் பூஜைகள் செய்யப்பட்டன.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெய்யிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் மரக்கடை ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, பன்னீா் மற்றும் பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து,கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட பந்தலில் பக்தா்களின் ஒருங்கிணைந்து, வெயிலின் தாக்கம் குறைய வேண்டி, கூட்டுப் பிராா்த்தனை நடத்தினா். தொடா்ந்து, ஷீரடி சாய்பாபாவுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பிராா்த்தனையில் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெர... மேலும் பார்க்க

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை!

நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் த. ஹரிராஜன் தெரிவித்தது: 2019-இல் கரோனா தொற்ற... மேலும் பார்க்க

சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான ப... மேலும் பார்க்க