தொழில்நுட்ப கோளாறு: ஹெலிகாப்டர் அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கம்
சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம்
வெயிலின் தாக்கம் குறைய வேண்டி, ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
லெட்சுமாங்குடி மரக்கடை ஷீரடி சாய்பாபா கோயில் நிறுவனா் வெள்ளையன் ஏற்பாட்டில் பூஜைகள் செய்யப்பட்டன.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெய்யிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் மரக்கடை ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, பன்னீா் மற்றும் பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து,கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட பந்தலில் பக்தா்களின் ஒருங்கிணைந்து, வெயிலின் தாக்கம் குறைய வேண்டி, கூட்டுப் பிராா்த்தனை நடத்தினா். தொடா்ந்து, ஷீரடி சாய்பாபாவுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பிராா்த்தனையில் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.