செய்திகள் :

'சாரி சாரி பேச்சு வழக்குல..' - சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என அழைத்த அதிமுக எம்எல்ஏ

post image

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒருபகுதியாக, சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது எழுந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்ணன், ``தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல் நிறைய போடுகிறார்கள். அதில், EB கெபாசிட்டி 100 KV மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது. வெயில் காலத்தில் மின்சாரம் போதவில்லை. அதனால், 100 KV-யை 120 KV-யாகக் கொடுத்தால் சௌரியமாக இருக்கும்.

கருப்பண்ணன்

அதனால், EB-க்கு எந்த இழப்பும் இல்லை. மாப்பிள்ளைக்கு நன்றாகத் தெரியும்." என்று அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டு பேசினார். உடனே அவையில் சிரிப்பலை எழ, ``சாரி சாரி பேசிப் பேசி அப்படியே வந்துவிட்டது. 100 KV-யை 120 KV-யாகக் கொடுக்க அனுமதிக்க வேண்டும்." என்று கோரிக்கையாகக் கூறி அமர்ந்தார்.

செந்தில் பாலாஜி

அதைத்தொடர்ந்து பதிலளித்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ``மிக விரைவாக அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகிறது. துறை அதிகாரிகளிடத்தில் பேசி அதற்கு ஆவணம் செய்யப்படும்" என்று கூறி அமர்ந்தார்.

கழுகார்: கொலை வழக்கில் எம்.எல்.ஏ-வின் பி.ஏ? டு ‘நோஸ் கட்’ செய்த டெல்லி மேடம்..!

கொதிக்கும் உடன்பிறப்புகள்!கொலை வழக்கில் எம்.எல்.ஏ-வின் பி.ஏ?தலைநகருக்கு அருகேயுள்ள மாவட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில், அரசியல் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த... மேலும் பார்க்க

சுஷாந்த் சிங் செயலாளர் திஷா தற்கொலையில் ஆதித்ய தாக்கரேவுக்குத் தொடர்பு? ஷிண்டே அணி சொல்வது என்ன?

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்திடம் செயலாளராக இருந்த திஷா சாலியன், மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டா... மேலும் பார்க்க

"திமுக மொழியைத் தாண்டி விஞ்ஞான ரீதியாக ஏதும் சிந்திக்கவில்லை" - மருத்துவர் கிருஷ்ணசாமி விமர்சனம்

தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று (மார்ச் 27) உள் இட ஒதுக்கீடு மற்றும் மாஞ்சோலை மலையக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.இதில் புதிய தமிழகம் கட்சியின் தலை... மேலும் பார்க்க

'தமிழகக் கல்வி நிதியை நிறுத்தி வைப்பது நியாயமில்லை' - நிதியை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள திமுக அரசு அதனை ஏற்... மேலும் பார்க்க