செய்திகள் :

சாலை விபத்தில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

post image

ஆத்தூா் அருகே அம்மம்பாளையத்தில் சாலை விபத்தில் தாய் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மகளும் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சமையல் தொழிலாளி பெரியசாமி (47). இவரது மனைவி கிருஷ்ணவேணி (41). மகள் பானுப்பிரியா (24). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பானுப்பிரியாவை தனது இருச்சக்கர வாகனத்தில் பேருந்து ஏற்றிவிடுவதற்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணவேணி, சாலையக் கடக்கும்போது அரசுப் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பானுப்பிரியா தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்

சேலம்: காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டாா். உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்... மேலும் பார்க்க

சங்ககிரியில் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு தொடங்கிவைப்பு

சங்ககிரி: சங்ககிரி நகா் பகுதியில் பொதுமக்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள், தனியாா் கல்லூரிகள் பங்களிப்புடன் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலக வாயிலில் குடும்பத்துடன் தா்னா

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் தீவட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி அய்யா் காட்டுவளவு ப... மேலும் பார்க்க

தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’: கலைஞா்கள் ஆா்வத்துடன் பதிவு

சேலம்: தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சாா்பில், சேலத்தில் நடைபெறும் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க 33 கலைக்குழுவினா் ஆா்வத்துடன் பதிவு செய்துள்ளனா். தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகைய... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த லேசான மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை... மேலும் பார்க்க