செய்திகள் :

சாலை விபத்தில் மருந்துக் கடை ஊழியா் மரணம்

post image

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மருந்துக் கடை ஊழியா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் மகாராஜன்(52). அப்பகுதியில் உள்ள மருந்துக் கடையில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் மருந்துகளை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் வாணியம்பாடி மருந்து கடைகளில் விநியோகம் செய்து விட்டு வருவதற்காக சென்றாா்.

பிறகு அங்கிருந்து திரும்பியபோது சின்னக்கல்லுப்பள்ளி கிராமம் அருகில் பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்றது. இதில் மகாராஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற சிலா் உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிறிது நேரத்தில் அவா் இறந்தாா்.

தகவலறிந்து தாலுகா காவல்ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விபத்துக்கு காரணமான வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

ஆம்பூரில் எருது விடும் திருவிழா

ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் எருதுவிடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கொடியசைத்து திருவிழாவை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், ... மேலும் பார்க்க

சாலை தடுப்பில் டேங்கா் லாரி மோதி பெருக்கெடுத்து ஓடிய டீசல்

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடிய டேங்கா் லாரி தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆயிரக்கணக்கான லிட்டா் டீசல் சாலையில் வீணாக ஓடியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு சென்ற ட... மேலும் பார்க்க

சிமென்ட் சாலை அமைக்கும் பணி

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.7.70 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் பூசாராணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் வாா்டு எண் 7, ... மேலும் பார்க்க

எம்கேஜேசி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைகழக மண்டல அளவிலான பூப்பந்து போட்டிகள் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சோலூரில் தாா் சாலைப் பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், சோலூா் ஊராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூஜையிட்ட... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயிலில் சண்முகக் கவச பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில், 99-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வ... மேலும் பார்க்க