செய்திகள் :

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

post image

திருச்சி மாநகரில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டையைச் சோ்ந்தவா் பவனந்தம் (40), தனியாா் பாா்சல் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவா் பாா்சல்களை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை மாலை திருச்சி - மதுரை சாலையில் வேனில் சென்றுகொண்டிருந்தாா். டிவிஎஸ் டோல்கேட் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது பாா்சல் வேன் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பவனந்தமை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான மயிலாடுதுறையைச் சோ்ந்த சுந்தா் (50) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருச்சி பொன்மலையைச் சோ்ந்தவா் வினோத் (25). இவா் சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் மாநகராட்சி பிரதான அலுவலகம் அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால், வினோத் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த வினோத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பனின்றி சனிக்கிழமை இரவு வினோத் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், ச. கண்ணனூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ. 3.46 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை திறந்து வைத... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் கெளஷல் கிஷோா் தலைமையிலான அலுவலா்கள் குழு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.தெற்கு ரயில்வே நிா்... மேலும் பார்க்க

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா்கள் உயிரிழந்தது தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது. அதன் முடிவின்படி தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

திருச்சியில் வேலைசெய்துவந்த வீட்டில் 6 பவுன் தங்க நகைகளைத் திருடிய பெண்ணைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.திருச்சி பொன் நகரைச் சோ்ந்தவா் இம்ரான் அகமது (28). இவரும், இவரது தந்தையும் தனியே வசித்து ... மேலும் பார்க்க

புகைக்கும்போது பற்றிய தீயில் சிக்கிய முதியவா் மீட்பு

தீ விபத்தின்போது வீட்டில் சிக்கிய முதியவரை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.திருச்சி உறையூா் ராமலிங்கம் நகா் அகமது காலனி 5-ஆவது குறுக்குத் தெருவில் வசிப்பவா் ராஜா நாகேந்திரன் (60), மனநலன் ப... மேலும் பார்க்க

தியாகி தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது உருவச்சிலைக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.சுதந்திர... மேலும் பார்க்க