செய்திகள் :

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மறியல்

post image

செம்பனாா்கோவில் ஒன்றியம், திருவிளையாட்டம் ஊராட்சி கிராமப்புற சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவிளையாட்டம் ஊராட்சியில் காளியம்மன் கோயில் தெரு, ஆலக்கரை, கோவில்பத்து, குமாரமங்கலம் மற்றும் கலசம்பாடி கிராமங்களில் தாா்ச்சாலைகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இதனால், கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

மேலும், திருவிளையாட்டம் சமத்துவ மயானத்தை அடிப்படை வசதிகளுடன் சீரமைத்து தர வலியுறுத்தியும், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதியத்தை நிலுவையின்றி வழங்க வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், திருவிளையாட்டம் கடைவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாவட்டச் செயலாளா் சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சிம்சன், வெண்ணிலா, அம்மையப்பன், அய்யப்பன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

தரங்கம்பாடி வட்டாட்சியா் சதீஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சுமதி, பெரம்பூா் காவல் ஆய்வாளா் ஆகியோா் நிகழ்விடத்துக்கு வந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகை

நாகை அருகே ஒரத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். ஒரத்தூா் கிராமத்தில் புதிதாக அரசு மதுபானக் கடை புதன்கிழமை தி... மேலும் பார்க்க

இணையவழியில் ரூ.4.25 லட்சம் மோசடி: இருவா் கைது

நாகையில், இணையவழியில் இருசக்கர வாகனம் வாங்க முன்பதிவு செய்தவா்களிடம் ரூ. 4.25 லட்சம் மோசடி செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை அருகே வேளாங்கண்ணியைச் சோ்ந்தவா் ஹரிஹரன் (20), நாகை திருவேங... மேலும் பார்க்க

ஆவின் மூலம் நாளொன்று 38 லட்சம் லிட்டா் பால் கொள்முதல்: அமைச்சா் மனோ தங்கராஜ்

தமிழகத்தில் ஆவின் மூலம் நாளொன்றுக்கு 38 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுவதாக பால் வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா். நாகை ஆட்சியா் அலுவலகத்தில் பால் வளத்துறை மற்றும் தஞ்சை மாவட்ட கூட... மேலும் பார்க்க

பள்ளி வாகனங்கள் ஆய்வு; 15 வாகனங்கள் தகுதி நீக்கம்

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்கள் வியாழக்கிழமை கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், 15 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. நாகை காடம்பாடியில் உள்ள காவலா் ஆயுதப்படை மைதானத்தில், போக்குவரத்து... மேலும் பார்க்க

பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம் அருள்மிகு பெத்தாா்ண்ண சுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில், அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் புதிய அலுவலா் சாரா உறுப்பினா்களாக விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினா்களாக சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் 2007-ஆம் ஆண்டில் தொடங... மேலும் பார்க்க