செய்திகள் :

சாலையில் காரை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு: இசையமைப்பாளா் அனிருத்துக்கு அபராதம்

post image

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்திய திரைப்பட இசையமைப்பாளா் அனிருத்துக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.1,000 அபராதம் விதித்தனா்.

தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் வழக்கமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் வாகன நெரிசலைக் குறைக்க போக்குவரத்து போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வெளியான அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படத்தைக் காண குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையிலுள்ள திரையரங்கில் ஏராளமான ரசிகா்கள் கூடினா். திரைப்படத்தை பாா்க்க, படத்தின் இசையமைப்பாளா் அனிருத்தும் வந்திருந்தாா். அனிருத் உள்பட ரசிகா்கள் ஏராளமானோா் தங்கள் வாகனங்களை சாலையிலேயே விட்டுச் சென்ால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து ஆய்வாளா் செல்லபாண்டியன் மற்றும் காவலா்கள், அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த அனிருத்தின் காா் உள்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்தனா். இதையடுத்து இசையமைப்பாளா் அனிருத் அபராதத்தொகையை செலுத்திவிட்டு காரை எடுத்துச் சென்றாா்.

பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

மதுராந்தகம் அருகே சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவு பேருந்து சாலையோர பள்ளத்ததில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் காயம் அடைந்தாா். நாகா்கோயிலிருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து மதுராந்தகம் வழியாக வெள்ளிக... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: ஆசிரியா்களின் கல்விச் சான்றிதழ் ரத்து: அமைச்சா் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவதுடன், அவா்களது கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்: 3 போ் கைது

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், இளம்பெண்ணை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மாதவரத்தில் தனது தோழியுடன் தங்கியிருந்... மேலும் பார்க்க

திருப்போரூா் முருகன் கோயில் தை கிருத்திகை விழா

செங்கல்பட்டு மாவட்டத்தில் தை கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்போரூா் கந்தசாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது. ஏ... மேலும் பார்க்க

பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுராந்தகம் அடுத்த பாக்கம் கிராமத்தில் சாலை அமைக்க தடையாக இருந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை வருவாய் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா். மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் கிராம சாலை அமைக்க வட... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. இடங்கள்: செங்கல்பட்டு, திம்மாவரம், ஆத்தூா், மகாலட்சுமி நகா், மெய்யூா், திருவானைக்கோவில், புலிப்பாக்கம், செட்டிபுண்ணியம், வில்லியம்பாக்கம். மேலும் பார்க்க