செய்திகள் :

`நீங்கதான் ஹீரோயின்' - நடிக்க வைப்பதாகக் கூறி மோசடி; உத்தரகாண்ட் மாஜி முதல்வர் மகள் புகார்

post image
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் ரமேஷ் நிஷாங். இவர் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகள் ஆருஷி நிஷாங்க்.

நடிப்பில் ஆர்வம்கொண்ட ஆருஷி சொந்தமாக ஹிம்ஸ்ரீ பிலிம் என்ற திரைப்பட தயாரிப்பு கம்பெனியையும் நடத்தி வருகிறார். இவரிடம் மும்பையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் மான்சி வருண் மற்றும் வருண் பிரமோத் குமார் ஆகியோர் தாங்கள் மினி பிலிம்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டனர். இருவரும் ஆன்கோன் கி குஸ்டாகியன் என்ற பெயரில் படம் தயாரிக்க இருப்பதாக ஆருஷியிடம் தெரிவித்தனர். அதோடு இப்படத்தில் நடிக்க ஆருஷிக்கு வாய்ப்பு கொடுப்பதாகத் தெரிவித்தனர். மேலும் படத்தை தயாரிக்க ரூ.5 கோடி பணம் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கொடுப்பதாகத் தெரிவித்தனர். படத்தில் நடிக்கக் கொடுக்கும் கதாபாத்திரம் பிடிக்கவில்லையெனில் பணத்திற்கு 15 சதவிகிதம் வட்டி கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

தந்தையுடன் ஆருஷி

அவர்களின் பேச்சை நம்பி அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட ஆருஷி கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டு தவணையாக மொத்தம் 4 கோடி ரூபாயைக் கொடுத்தார். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்ட பிறகு ஆருஷியிடம் கேட்காமல் படப்பிடிப்பை நடித்தி முடித்தனர். ஆருஷி நடிக்க முடிவு செய்திருந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்தனர். அதோடு அப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் ஆருஷியின் படத்தை நீக்கிவிட்டனர். இதையடுத்து தான் கொடுத்த பணத்தை திரும்பக் கொடுக்கும்படி ஆருஷி கேட்டார். ஆனால் தயாரிப்பாளர்கள் இரண்டு பேரும் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்தனர். அதோடு ஆருஷிக்கு எதிராகவும், அவரின் தந்தைக்கு எதிராகவும் வழக்கு தொடருவோம் என்று மிரட்டினர். இதையடுத்து வேறு வழியில்லாமல் ஆருஷி போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாரும் கைது செய்யப்படவில்லை.

Industrialist Murder: சொத்துப் பிரச்னை; தொழிலதிபர் தாத்தாவை 73 முறை குத்திக் கொன்ற பேரன்!

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜனார்தன் ராவ். கடந்த வியாழக்கிழமை மாலை, ஜனார்தன் ராவின் உடல் ரத்தக்காயங்களுடன் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்குக் காரணமான அவரது பே... மேலும் பார்க்க

விசிக-வினர் மீது பழி சுமத்த நாடகமாடினாரா பெண் எஸ்.ஐ! - நடந்தது என்ன?

`விசிக மாவட்டச் செயலாளர் என்னைத் தாக்கினார்' என்று பெண் எஸ்.ஐ எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'அது முழுக்க தவறான தகவல்' என்று காவல்துறையே அறிவித்துள்ளது சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சிய... மேலும் பார்க்க

ஓசியாகக் கறிகொடுக்க மறுத்த கறிக்கடைக்காரர்; பிணத்துடன் வந்த வாடிக்கையாளர் - நடந்தது என்ன?

தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டியில் ஆட்டு இறைச்சிக் கடை நடத்தி வருபவர் மணியரசன். இவரது கடைக்கு அதேபகுதியைச் சேர்ந்த குமார் (40) என்பவர் கறி வாங்கச் சென்றுள்ளார். குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ... மேலும் பார்க்க

ஏற்காடு: அரசு பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு... ஆசிரியர் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நில... மேலும் பார்க்க

`பாதி விலைக்கு ஸ்கூட்டர்' - நம்பவைத்து ரூ.500 கோடி மோசடி; கிளப்... ஆடம்பர வாழ்க்கை... சிக்கிய நபர்!

கேரள மாநிலம், தொடுபுழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன். பாதி விலைக்கு ஸ்கூட்டர்கள் வழங்க உள்ளதாகக் கூறி கேரளா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் அனந்த கிருஷ்ணன் கைதுசெய்... மேலும் பார்க்க

இதயத் துடிப்பை நிறுத்திய 4 மாத கரு - ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்

வேலூர் அருகே வந்துகொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ஓடும் ரயிலில் இருந்தும் கீழே தள்ளிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறத... மேலும் பார்க்க