செய்திகள் :

ஏற்காடு: அரசு பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு... ஆசிரியர் போக்சோவில் கைது!

post image

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தற்காலிக ஆசிரியராக சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் நெய்ய மலை பகுதியை சேர்ந்த இளைய கண்ணு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் பத்தாம், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரான வெள்ளி மலையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அதில், தன்னிடமும் தனது தோழிகள் 4 பேரிடமும், ஆசிரியர் இளைய கண்ணு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.

பாலியல் தொந்தரவு

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இப்புகார் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அப்பள்ளியில் சென்று மாணவியரிடம் விசாரித்தனர். பின்னர் ஏற்காடு காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையிலான போலீஸார் சென்று மாணவியரிடம் விசாரணை நடத்தினர். அதில், பாதிக்கப்பட்ட மாணவி உட்பட ஐந்து மாணவிகளுக்கு ஆசிரியர் இளைய கண்ணு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் பெற்றோரை பிரிந்து விடுதியில் தங்கியிருந்து படித்து வருவதால் மாணவிகளை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து ஆசிரியர் இளைய கண்ணு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் இளைய கண்ணுவை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இப் புகார் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். அதன் பெயரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அப்பள்ளியில் சென்று மாணவியரிடம் விசாரித்தனர். பின்னர் ஏற்காடு காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார்.

கைது

புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் சென்று மாணவியரிடம் விசாரணை நடத்தினர். அதில் பாதிக்கப்பட்ட மாணவி உட்பட ஐந்து மாணவிகளுக்கு ஆசிரியர் இளைய கண்ணு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பெற்றோரை பிரிந்து விடுதியில் தங்கி மாணவிகள் படித்து வருவதால் அவர்கள் வெளியில் சொல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர் இளைய கண்ணு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் இளைய கண்ணுவை நேற்று போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Industrialist Murder: சொத்துப் பிரச்னை; தொழிலதிபர் தாத்தாவை 73 முறை குத்திக் கொன்ற பேரன்!

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜனார்தன் ராவ். கடந்த வியாழக்கிழமை மாலை, ஜனார்தன் ராவின் உடல் ரத்தக்காயங்களுடன் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்குக் காரணமான அவரது பே... மேலும் பார்க்க

விசிக-வினர் மீது பழி சுமத்த நாடகமாடினாரா பெண் எஸ்.ஐ! - நடந்தது என்ன?

`விசிக மாவட்டச் செயலாளர் என்னைத் தாக்கினார்' என்று பெண் எஸ்.ஐ எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'அது முழுக்க தவறான தகவல்' என்று காவல்துறையே அறிவித்துள்ளது சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சிய... மேலும் பார்க்க

ஓசியாகக் கறிகொடுக்க மறுத்த கறிக்கடைக்காரர்; பிணத்துடன் வந்த வாடிக்கையாளர் - நடந்தது என்ன?

தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டியில் ஆட்டு இறைச்சிக் கடை நடத்தி வருபவர் மணியரசன். இவரது கடைக்கு அதேபகுதியைச் சேர்ந்த குமார் (40) என்பவர் கறி வாங்கச் சென்றுள்ளார். குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ... மேலும் பார்க்க

`நீங்கதான் ஹீரோயின்' - நடிக்க வைப்பதாகக் கூறி மோசடி; உத்தரகாண்ட் மாஜி முதல்வர் மகள் புகார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் ரமேஷ் நிஷாங். இவர் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகள் ஆருஷி நிஷாங்க்.நடிப்பில் ஆர்வம்கொண்ட... மேலும் பார்க்க

`பாதி விலைக்கு ஸ்கூட்டர்' - நம்பவைத்து ரூ.500 கோடி மோசடி; கிளப்... ஆடம்பர வாழ்க்கை... சிக்கிய நபர்!

கேரள மாநிலம், தொடுபுழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன். பாதி விலைக்கு ஸ்கூட்டர்கள் வழங்க உள்ளதாகக் கூறி கேரளா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் அனந்த கிருஷ்ணன் கைதுசெய்... மேலும் பார்க்க

இதயத் துடிப்பை நிறுத்திய 4 மாத கரு - ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்

வேலூர் அருகே வந்துகொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ஓடும் ரயிலில் இருந்தும் கீழே தள்ளிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறத... மேலும் பார்க்க