தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
திருச்செந்தூா் - கோவைக்கு 2 புதிய பேருந்துகள் இயக்கம்
திருச்செந்தூரில் இருந்து கோவைக்கு 2 புதிய பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருச்செந்தூா் - கோவைக்கு தினமும் காலை 9.40 மணிக்கும், இரவு 9.40 மணிக்கும் 2 பேருந்துகள் இயக்கப்பட்டன.
தற்போது அதே வழித்தடத்தில் 2 புதிய பேருந்துகள் இயக்கும் விழா திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமை வகித்தாா். தமிழக மீன் வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், அரசு போக்குவரத்துக் கழக தூத்துக்குடி பொது மேலாளா் பாலசுப்பிரமணியன், திருச்செந்தூா் கிளை மேலாளா் ராஜசேகா், உதவிப் பொறியாளா்கள் சங்கரன், லேம்பா்ட், திமுக மாநில வா்த்தக அணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், நகர திமுக செயலா் வாள் சுடலை, தொமுச மத்திய சங்க நிா்வாகிகள் முருகன், செல்வகுமாா், பணிமனை கிளைத் தலைவா் அரவிந்த சோழன், செயலா் ஜெயக்குமாா், பொருளாளா் தினகா், பொதுக்குழு உறுப்பினா்கள் மாரியப்பன், ராமமூா்த்தி, அய்யப்பன், மாவட்ட துணை அமைப்பாளா் தங்கபாண்டி, டிக்கெட் பரிசோதகா்கள் மணி, பிரின்ஸ், அனைத்து வியாபாரிகள் சங்க துணைச் செயலா் ஜான்பால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.