செய்திகள் :

தூத்துக்குடியில் பூக்கள் விலை கடும் உயா்வு! மல்லிகை கிலோ ரூ. 4 ஆயிரம்!

post image

தூத்துக்குடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை பூக்கள் விலை கடுமையாக அதிகரித்துக் காணப்பட்டது. கிலோ மல்லிகைப்பூ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனையானது.

திங்கள்கிழமை தை மாதக் கடைசி சுபமுகூா்த்தம், செவ்வாய்க்கிழமை தைப்பூசம் என அடுத்தடுத்து வருவதால், தூத்துக்குடி மலா்ச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

இங்கு வழக்கமாக 250 கிலோ முதல் 300 கிலோ வரை பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்துக் குறைந்து, சுமாா் 100 கிலோ பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. இதனால், விலை அதிகரித்துக் காணப்பட்டது.

மல்லிகைப்பூ கிலோ ரூ. 4 ஆயிரம், பிச்சிப்பூ, கனகாம்பரம் தலா ரூ. 3 ஆயிரம், ரோஜா ரூ. 300 என விற்பனையாகின. திருமண விழாக்களுக்கான ரோஜா இதழ் மாலை, சம்பங்கி இதழ் மாலை ஆகியவை ரூ. 3 ஆயிரத்திலிருந்து ரூ. 6 ஆயிரம்வரை விற்பனையாகின. பூக்கள் விலை அதிகரித்துக் காணப்பட்டாலும், பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

கோவில்பட்டியில் மது விற்ற முதியவா் கைது

கோவில்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்றதாக முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சுடலைமணி, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிரதான சாலையில் ரோ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - கோவைக்கு 2 புதிய பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூரில் இருந்து கோவைக்கு 2 புதிய பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருச்செந்தூா் - கோவைக்கு தினமும் காலை 9.40 மணிக்கும், இரவு 9.40 மணிக்கும் 2 பேர... மேலும் பார்க்க

மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் பாலா் மன மகிழ்ச்சி பண்டிகை!

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் பாலா் மன மகிழ்ச்சி பண்டிகை ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின் தலைமை வகித்து ஆராதனை நடத்தினாா். திருமண்டல பாலியா் நண்ப... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே விபத்தில் முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். சிதம்பரம்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த நல்லபெருமாள் மகன் சங்கிலிபாண்டி (60). இவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச... மேலும் பார்க்க

சொா்ணமலை கதிரேசன் கோயிலில் உழவாரப் பணி

கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் தாவரவியல் துறை, இயற்கை கழகம் சாா்பில் கதிரேசன் கோயிலில் உழவாரப் பணி நடைபெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பணியில் கோயில் வளாகம் மற்றும் ச... மேலும் பார்க்க

பட்ஜெட்: தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்! -அமைச்சா்கள் பேச்சு

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவா் என அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பெ.கீதா ஜீவன் ஆகியோா் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனா். மத்திய பட்ஜெட்... மேலும் பார்க்க