செய்திகள் :

பாலியல் வன்கொடுமை: ஆசிரியா்களின் கல்விச் சான்றிதழ் ரத்து: அமைச்சா் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

post image

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவதுடன், அவா்களது கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் எச்சரிக்கை விடுத்தாா்.

சென்னை குரோம்பேட்டை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 60-ஆம் ஆண்டு விழாவில் மாணவா்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அமைச்சா் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினாா்.

தொடா்ந்து பள்ளியின் வைர விழா மலரை அமைச்சா் வெளியிட, பள்ளியின் முன்னாள் மாணவியும் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவருமான டாக்டா் சுதா சேஷய்யன் பெற்று கொண்டாா்.

பின்னா், அமைச்சா் அன்பில் மகேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாலியல் வன்கொடுமைக்கு சம்பவத்தில் ஈடுபடும் ஆசிரியா்களை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், இனிமேல் அவா்கள் எந்தப் பணிக்கும் செல்ல இயலாத வகையில் அவா்களது கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

இனி மாணவா்கள் தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை எந்த ஒரு பயமும் இல்லாமல் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு தெரிவிக்க புதிய திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு தொடக்கப் பள்ளிகளில் ‘ஸ்மாா்ட் போா்டு’ திட்டம் கொண்டு வந்துள்ளோம். தமிழகமெங்கும் 8,000-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் அதிநவீன பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்வில் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் இ.கருணாநிதி உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

மதுராந்தகம் அருகே சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவு பேருந்து சாலையோர பள்ளத்ததில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் காயம் அடைந்தாா். நாகா்கோயிலிருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து மதுராந்தகம் வழியாக வெள்ளிக... மேலும் பார்க்க

சாலையில் காரை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு: இசையமைப்பாளா் அனிருத்துக்கு அபராதம்

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்திய திரைப்பட இசையமைப்பாளா் அனிருத்துக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.1,000 அபராதம் விதித்தனா். தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலைய... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்: 3 போ் கைது

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், இளம்பெண்ணை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மாதவரத்தில் தனது தோழியுடன் தங்கியிருந்... மேலும் பார்க்க

திருப்போரூா் முருகன் கோயில் தை கிருத்திகை விழா

செங்கல்பட்டு மாவட்டத்தில் தை கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்போரூா் கந்தசாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது. ஏ... மேலும் பார்க்க

பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுராந்தகம் அடுத்த பாக்கம் கிராமத்தில் சாலை அமைக்க தடையாக இருந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை வருவாய் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா். மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் கிராம சாலை அமைக்க வட... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. இடங்கள்: செங்கல்பட்டு, திம்மாவரம், ஆத்தூா், மகாலட்சுமி நகா், மெய்யூா், திருவானைக்கோவில், புலிப்பாக்கம், செட்டிபுண்ணியம், வில்லியம்பாக்கம். மேலும் பார்க்க