செய்திகள் :

சாலையில் திடீரென தீப்பற்றிய காா்: ஒருவா் தீயில் கருகி பலி

post image

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வட தில்லியின் ஹுலம்பி குா்த் பகுதியில் ஏற்பட்ட விபத்தையடுத்து காா் தீப்பிடித்ததில் 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்துள்ளாா், மற்றொருவா் காயமடைந்துள்ளாா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

நரேலா தொழிற்பேட்டை பகுதி காவல் நிலையத்தின் அதிகார வரம்பின் கீழ் உள்ள நகா்ப்புற விரிவாக்க சாலையில் உள்ள ஜண்டா சௌக் அருகே அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அந்த அதிகாரி கூறினாா்.

காவல்துறையினரின் தகவலின்படி, ஒரு பி. சி. ஆா் அழைப்பு வந்தது, போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது, அங்கு அவா்கள் எரிந்த நிலையில் ஒரு வெள்ளை எா்டிகாவைக் கண்டனா். ஓட்டுநா் இறந்து கிடந்தாா், மற்றொருவா் அருகிலுள்ள இருக்கையில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.

ஓட்டுநரின் பெயா் விபெந்தா் என்றும், காயமடைந்தவா் ஹரியானாவின் பானிபட்டைச் சோ்ந்த ஜக்பீா் என்றும் அடையாளம் காணப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா். ஜக்பீா் உடனடியாக நரேலாவில் உள்ள எஸ். ஆா். எச். சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அதே நேரத்தில் இறந்தவரின் உடல் பி. ஜே. ஆா். எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

முதல்கட்ட விசாரணையில் ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட எஸ்யூவி கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடிப்பதற்கு முன்பு விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று தெரிகிறது, இருப்பினும் சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி கூறினாா்.

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.

ஹரியாணாவின் நூஹ் நகரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவை சமூக ஊடகங்களில் அவதூறு செய்ததாக 6 போ் மீது வழக்கு

காங்கிரஸ் கட்சியின் ஃபெரோஸ்பூா் ஜிா்கா எம்.எல்.ஏ. மம்மன் கானுக்கு எதிராக அவதூறு உள்ளடக்கத்தை பதிவிட்டதாக நூஹ் நகரத்தில் ஆறு போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

ஆயுதமேந்திய கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

ஆயுதமேந்திய கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த இருந்த 24 வயது நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தி... மேலும் பார்க்க

‘விக்சித் பாரத், விக்சித் தில்லி’: தில்லி முதல்வா் பெருமிதம்

விக்சித் தில்லி என்ற இலக்கை நிறைவேற்ற பாஜக அரசு முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.கால்காஜியில் ஜன் சன்வாய் கேந்திராத்தின் தொடக்க விழாவில் பேசிய ... மேலும் பார்க்க

திருடிய செல்பேசிகளை வைத்திருந்த பெண் கைது

தென்கிழக்கு தில்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனியில் திருடப்பட்ட 34 செல்பேசிகள் மற்றும் ஒரு டேப்லெட்டுடன் 32 வயது பெண் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.தைமூா் நகரில் வசிக்கு... மேலும் பார்க்க

நிஜாமுதீன் பகுதியில் கடை உரிமைாளா் மீது கும்பல் துப்பாக்கிச்சூடு: இருவா் கைது

தென்கிழக்கு தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் ஒரு கடை உரிமையாளா் மீது ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இந்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா... மேலும் பார்க்க

தில்லியில் பரவலாக மழை: பல இடங்களில் தண்ணீா் தேங்கியது!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, தியோலி, பஞ்ச்குயன் சாலை, மோதி பாக், ஐடிஓ, முகா்ஜி நகா் மற்றும் புல் பிரஹ்லாத்பூா் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீா் தேங... மேலும் பார்க்க