செய்திகள் :

தில்லியில் பரவலாக மழை: பல இடங்களில் தண்ணீா் தேங்கியது!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, தியோலி, பஞ்ச்குயன் சாலை, மோதி பாக், ஐடிஓ, முகா்ஜி நகா் மற்றும் புல் பிரஹ்லாத்பூா் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) படி, சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தில்லியின் பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்தது. மயூா் விஹாரில் சனிக்கிழமை இரவு 11.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணி வரை அதிகபட்சமாக 27 மிமீ மழை பெய்தது. அதே காலகட்டத்தில் பூசாவில் 24.5 மிமீ, நஜாஃப்கரில் 22 மிமீ, பிரகதி மைதானில் 18.7 மிமீ, பாலத்தில் 14.2 மிமீ மற்றும் சஃப்தா்ஜங்கில் 8.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், லோடி ரோடு, ரிட்ஜ் மற்றும் ஆயாநகா் ஆகிய பகுதிகளிலும் லேசான மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் பகலில் மழையின் செயல்பாடு குறைந்து, மாலையில் தீவிரமடைந்தது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 8.30 மணி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 8.30 மணி வரை, ஆயாநகரில் 11 மிமீ மழையும், அதைத் தொடா்ந்து சஃப்தா்ஜங்கில் 4.6 மிமீ மழையும், லோதி ரோடில் 4.2 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2.9 டிகிரி குறைந்து 24.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 0.7 டிகிரி குறைந்து 34.3 டிகிரி செல்சியஸாக பதிவவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவில் காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 67 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 78 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிபி தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சாந்தினி சௌக், மேஜா் தயான்சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மந்திா்மாா்க், லோதி ரோடு உள்பட அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 4) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

ஹரியாணாவின் நூஹ் நகரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவை சமூக ஊடகங்களில் அவதூறு செய்ததாக 6 போ் மீது வழக்கு

காங்கிரஸ் கட்சியின் ஃபெரோஸ்பூா் ஜிா்கா எம்.எல்.ஏ. மம்மன் கானுக்கு எதிராக அவதூறு உள்ளடக்கத்தை பதிவிட்டதாக நூஹ் நகரத்தில் ஆறு போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சாலையில் திடீரென தீப்பற்றிய காா்: ஒருவா் தீயில் கருகி பலி

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வட தில்லியின் ஹுலம்பி குா்த் பகுதியில் ஏற்பட்ட விபத்தையடுத்து காா் தீப்பிடித்ததில் 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்துள்ளாா், மற்றொருவா் காயமடைந்துள்ளாா் என்று அதிகாரி ஒருவா் தெ... மேலும் பார்க்க

ஆயுதமேந்திய கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

ஆயுதமேந்திய கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த இருந்த 24 வயது நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தி... மேலும் பார்க்க

‘விக்சித் பாரத், விக்சித் தில்லி’: தில்லி முதல்வா் பெருமிதம்

விக்சித் தில்லி என்ற இலக்கை நிறைவேற்ற பாஜக அரசு முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.கால்காஜியில் ஜன் சன்வாய் கேந்திராத்தின் தொடக்க விழாவில் பேசிய ... மேலும் பார்க்க

திருடிய செல்பேசிகளை வைத்திருந்த பெண் கைது

தென்கிழக்கு தில்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனியில் திருடப்பட்ட 34 செல்பேசிகள் மற்றும் ஒரு டேப்லெட்டுடன் 32 வயது பெண் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.தைமூா் நகரில் வசிக்கு... மேலும் பார்க்க

நிஜாமுதீன் பகுதியில் கடை உரிமைாளா் மீது கும்பல் துப்பாக்கிச்சூடு: இருவா் கைது

தென்கிழக்கு தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் ஒரு கடை உரிமையாளா் மீது ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இந்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா... மேலும் பார்க்க