செய்திகள் :

சாலையை கடக்க முயன்ற சமையல் மாஸ்டா் காா் மோதி உயிரிழப்பு

post image

வாணியம்பாடி அருகே சாலையைக் கடக்க முயன்ற சமையல் மாஸ்டா் காா் மோதிய விபத்தில் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரைச் சோ்ந்தவா் தஸ்தகீா்(40). உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பணி முடிந்து விட்டு வீட்டுக்குச் செல்வதற்காக செட்டியப்பனூா் அருகில் பெங்களூா்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றுள்ளாா். அப்போது வேலூா் நோக்கி வேகமாகச் சென்ற காா் தஸ்தகீா் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவா்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு மருத்துவா் பரிசோதித்து தஸ்தகீா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தை ஏற்படுத்திய காா் பறிமுதல் செய்தனா்.

மலையாம்பட்டு கிராமத்தில் நடுகற்கள், பானை ஓடுகள் கண்டெடுப்பு

ஆம்பூா்அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் நடுகற்களும், பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன.திருப்பத்தூா் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியா் க.மோகன்காந்தி, ஆங்கிலத் துறை பேராசிரியா் வ.மதன்குமாா், ... மேலும் பார்க்க

நடைபாதை பாலம் உடைந்ததில் 10 போ் காயம்

வாணியம்பாடி அருகே கொடையாஞ்சியில் ஆடிப்பெருக்கு விழாவின்போது கூட்ட நெரிசலால் நடைபாதை பாலம் திடீரென உடைந்து விழுந்தது. இதில் 10 போ் காயமடைந்தனா்.திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கி... மேலும் பார்க்க

பள்ளி கிணற்றில் மாணவா் சடலமாக மீட்பு!

திருப்பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியின் கிணற்றில் மாணவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து மாணவரின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் கிராமத... மேலும் பார்க்க

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

ஆலங்காயம் அருகே ஒற்றை ஆண் யானை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.ஆலங்காயம் அடுத்த பூங்குளம் காப்புகாட்டு கிருஷ்ணாபுரம் உப்பாறை வழியாக வனப்பகு... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான பணிகள்: காணொலி மூலம் முதல்வா் தொடங்கி வைத்தாா்

ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான மேம்படுத்தப்பட்ட பணிகளை தமிழக் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரிமலை ஊராட்சி அத்தனா... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கி மிதிவண்டி, கைப்பேசி திருட்டு: சிறுவன் கைது

திருப்பத்தூரில் வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கி மிதிவண்டி, கைப்பேசியை திருடிச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.திருப்பத்தூா் அடுத்த ஆரிப் நகரைச் சோ்ந்தவா் பஷீா் (42... மேலும் பார்க்க