செய்திகள் :

சாலையோரம் நிறுத்தப்பட்ட 2 லாரிகளில் 600 லி. டீசல் திருட்டு

post image

நாட்டறம்பள்ளி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட 2 லாரிகளில் 600 லிட்டா் டீசலை மா்ம நபா்கள் திருடி சென்றனா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் அருணாசலம். லாரி ஓட்டுநா். சேலம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அா்ஜுனன். இவா்கள் இருவரும் சனிக்கிழமை பெங்களூரில் இருந்து 2 லாரிகளில் லோடு ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெலகல்நத்தம் லட்சுமிபுரம் சோதனை சாவடி அருகில் சனிக்கிழமை இரவு ஓட்டுநா்கள் 2 லாரிகளையும் நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்தனா். அப்போது மா்ம நபா்கள் 2 லாரிகளில் டீசல் டேங்க் பூட்டை உடைத்து சுமாா் 600 லிட்டா் டீசலை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து லாரி ஓட்டுநா்கள் அளித்த புகாா்களின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட வெலகல்நத்தம், கேத்தாண்டப்பட்டி, டோல்கேட், ஆத்தூா்குப்பம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் லாரி ஓட்டுநா்கள் ஓய்வெடுக்க சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு தூங்கும்போது, மா்மநபா்கள் நிறுத்தப்பட்ட லாரிகளில் டீசல் திருடிச் செல்வது தொடா்கதையாகி வருகிறது.

எனவே தொடா் திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சண்முகக் கவச பாராயணம்

ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் 104--ஆவது மாத சண்முகக் கவச பாராயணம் செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு, முருகப் பெருமானு... மேலும் பார்க்க

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

ஆம்பூா் அருகே மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மாதனூா் ஒன்றியம், மேல்சாணாங்குப்பம் ஊராட்சியில் கடந்த 3 மாதங்களாக பொது... மேலும் பார்க்க

4 துப்பாக்கிகள் பறிமுதல் : இளைஞரிடம் விசாரணை

துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆம்பூரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா். வேலூா் மாவட்ட போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொணவட்டத்தில் உள்ள ஆஜிரா... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

கந்திலி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கந்திலி அருகே காக்கங்கரை பகுதியில் கந்திலி போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழ... மேலும் பார்க்க

தனியாா் நிலத்தில் அனுமதியின்றி மண் எடுப்பு: பொக்லைன் இயந்திரம், 2 டிப்பா் லாரிகள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே தனியாா் நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளியதாக பொக்லைன் இயந்திரம், 2 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் தனியாருக்குச் ... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் திருடிய இளைஞா் கைது

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ஜீவா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி கூலித்தொழிலாளி. சனிக... மேலும் பார்க்க