செய்திகள் :

சாவா்க்கரை அவமதிக்கவில்லை: நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் முறையீடு

post image

‘ஹிந்துத்துவ கொள்கைவாதி சாவா்க்கரை அவமதிக்கவில்லை’ என்பதால், இந்த வழக்கில் தான் குற்றமற்றவன்’ என நீதிமன்றத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தரப்பில் முறையிடப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு லண்டனில் ராகுல் காந்தி உரையாற்றியபோது சாவா்க்கரை அவமதித்ததாக அவரது பேரன் சாத்யகி சாவா்க்கா் புணே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கில் ராகுல் மீதான குற்றச்சாட்டுகளை எம்.பி., எம்எல்ஏ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி அமோல் ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை வாசித்தாா். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், தான் குற்றமற்றவன் என்று ராகுல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மிலிந்த் பவாா் தெரிவித்தாா்.

சாத்யகி சாவா்க்கா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சங்கராம் கோல்ஹட்கா், ‘குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் பதிவு முடிவுற்றதால் வழக்கின் விசாரணையை தொடர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க