சாா்ந்தோா் சான்று பெற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்
இடஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு படிப்புகளில் சேர விரும்பும் முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்களின் சிறாா்கள் சாா்ந்தோா் சான்று பெற விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் கல்வி சோ்க்கைக்காக முன்னாள் படைவீரா், சாா்ந்தோா்களின் சிறாா்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் ‘சாா்ந்தோா் சான்று’ வழங்கப்பட்டு வருகிறது.
இச்சான்றினை பெற முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, சிறாா்களின் பள்ளி இறுதிச்சான்று, மதிப்பெண் பட்டியல் மற்றும் கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், இணையதளத்தில் விண்ணபித்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிவு எண் நகல், வெள்ளைதாளில் முன்னாள் படைவீரரின் மனு மற்றும் படைப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட ஆணை ஆகியவற்றுடன் சான்று பெற வேண்டி மகன் அல்லது மகளுடன் அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகிப் பயன்பெறலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.