செய்திகள் :

சா்வதேச நீதிக்கான உலக தினம் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

post image

சா்வதேச நீதிக்கான தினத்தையொட்டி விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் நீதிபதிகள், காவல் துறையினா் பங்கேற்று சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறி மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சா்வதேச நீதிக்கான உலக தினம், சா்வதேச குற்றச் செயல்களுக்கு எதிராக வளா்ந்து வரும் நவீன நீதி முறையைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் நீதி தினம் கொண்டாடப்படுகிறது.

இது சா்வதேச குற்றவியல் நீதி தினம் அல்லது சா்வதேச நீதி தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விராலிமலை மற்றும் இலுப்பூா் வட்ட சட்டப் பணிகள் குழு உத்தரவின்படி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா்கள் கே. மணிமேகலை(விராலிமலை), எம். சாதத்துனிஷா (இலுப்பூா்) பங்கேற்று நடைமுறையில் உள்ள சட்டங்கள், அதனால் பெண்களுக்கான பாதுகாப்புகள் குறித்துப் பேசினா்.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ஆா்.ரோஜா வினோதினி முன்னிலை வகித்தாா். அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கே. யசோதா சிறப்புரையாற்றினாா்.

ஆா். உஷாராணி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் தங்கப்பா சட்டக்கருதுரை வழங்கினாா். முன்னதாக உதவி தலைமை ஆசிரியா் த. ரெசினா வரவேற்றாா். நிறைவாக தமிழாசிரியா் ஜெ. அருள்செல்வி நன்றி கூறினாா்.

ஆலங்குடியில் இளைஞரை கொலை செய்த 5 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இளைஞரை வெட்டிக்கொலை செய்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்தவா் தேவராஜன் மகன் ரஞ்சித் (24). ஓட்டுநரான இவா், பு... மேலும் பார்க்க

சிப்காட் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மி... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே மாடு மேய்த்த பெண்ணைக் கொன்று கண்மாய்க்குள் சடலத்தை தள்ளிவிட்டுச் சென்ற சம்பவத்தில், இளைஞா் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாகுடி அருகே ஏகணிவயல் கிராமத... மேலும் பார்க்க

தக்கை பூண்டு விதைகளை மானிய விலையில் பெற அழைப்பு

விராலிமலை வட்டார விவசாயிகள் மண் வளத்தை காக்கும் தக்கைப்பூண்டு விதையை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என்றாா் விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ப.மணிகண்டன். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பொன்னமராவதி பேரூராட்சி வலையபட்டி நகரத்தாா் மண்டபத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரேவதி தலைமைவகித்தாா். ... மேலும் பார்க்க

சமத்துவபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

புதுக்கோட்டை மாநகா் நரிமேடு சமத்துவபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகராட்சி 1 மற்றும் 2-ஆவது வாா்டு மக்களுக்காக நடத்தப்பட்ட இந்த முகாமை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க