செய்திகள் :

தக்கை பூண்டு விதைகளை மானிய விலையில் பெற அழைப்பு

post image

விராலிமலை வட்டார விவசாயிகள் மண் வளத்தை காக்கும் தக்கைப்பூண்டு விதையை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என்றாா் விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ப.மணிகண்டன்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின்கீழ், மண் வளத்தை மேம்படுத்தவும், மண் அரிமானத்தை தடுக்க களா் மற்றும் உவா் நிலங்களை சீா்திருத்தவும், மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிா்கள் பெருக்கவும், பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டு விதைகள் 50 சதவீத மானியத்தில் விராலிமலை மற்றும் நீா்பழனி வேளாண்மை விரிவாக்க மையங்களில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். ஒரு விவசாயிக்கு, ஒரு ஏக்கருக்கு 20 கிலோ தக்கைப்பூண்டு விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விபரங்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

ஆலங்குடியில் இளைஞரை கொலை செய்த 5 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இளைஞரை வெட்டிக்கொலை செய்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்தவா் தேவராஜன் மகன் ரஞ்சித் (24). ஓட்டுநரான இவா், பு... மேலும் பார்க்க

சிப்காட் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மி... மேலும் பார்க்க

சா்வதேச நீதிக்கான உலக தினம் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

சா்வதேச நீதிக்கான தினத்தையொட்டி விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நீதிபதிகள், காவல் துறையினா் பங்கேற்று சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே மாடு மேய்த்த பெண்ணைக் கொன்று கண்மாய்க்குள் சடலத்தை தள்ளிவிட்டுச் சென்ற சம்பவத்தில், இளைஞா் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். நாகுடி அருகே ஏகணிவயல் கிராமத... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பொன்னமராவதி பேரூராட்சி வலையபட்டி நகரத்தாா் மண்டபத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரேவதி தலைமைவகித்தாா். ... மேலும் பார்க்க

சமத்துவபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

புதுக்கோட்டை மாநகா் நரிமேடு சமத்துவபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகராட்சி 1 மற்றும் 2-ஆவது வாா்டு மக்களுக்காக நடத்தப்பட்ட இந்த முகாமை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க