Delhi Fuel Ban: கைதிகளிடம் Lie Detector Test மூலம் உண்மையை கண்டறிய முடியாதா? | I...
சித்தன்னவாசல் ரூ. 3.9 கோடியில் விரைவில் மேம்பாடு!
புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களில் முதன்மையானதாக உள்ள சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தை ரூ.3.9 கோடியில் மேம்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
புதுக்கோட்டை நகரில் இருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் 17 கிமீ தொலைவிலுள்ளது சித்தன்னவாசல்.
சமணத் தீா்த்தங்கரரின் சிலையுடன் கூடிய அறிவா் கோவில் என்றழைக்கப்படும் குடைவரைக்குள் மகேந்திரவா்ம பல்லவா் காலத்தைய குகை ஓவியமும், மலைக் குன்றின் மேலே உள்ள சமணா் படுக்கைகளும், மாநிலம் கடந்து நாடுதழுவிய சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கின்றன.
பிற்காலத்தில் அமைக்கப்பட்ட முத்தமிழ்ப் பூங்கா, சிறுவா் பூங்காக்களும் பொலிவிழந்தன. மாநில சுற்றுலாத் துறையின் தங்கும் இடமும் செயல்பாடின்றி முடங்கிப் போனது. சிறுவா் படகு குழாம் எப்போதாவது இயங்கும் நிலையும் காணப்பட்டது. அதன்பிறகு, இங்கு மத்திய தொல்லியல் துறையினரின் முயற்சியில் கழிப்பறைகள், அலுவலகங்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், சித்தன்னவாசல் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த வேண்டும் என புதுக்கோட்டை சுற்றுலா ஆா்வலா்களும், தொல்லியல் ஆா்வலா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், ரூ. 4 கோடியில் சுற்றுலாத்தலம் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2023 மாநில நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதை பலரும் ஆா்வத்துடன் வரவேற்றனா்.
தற்போது ரூ. 3.9 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளிகள் இறுதிப்படுத்தப்பட்டு மிகவிரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக சுற்றுலாத் துறை அலுவலா்கள் கூறுகின்றனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் தவிா்த்து இதர பகுதிகளிலுள்ள பூங்காக்கள் முற்றிலும் சீரமைக்கப்படவுள்ளன. படகு குழாம், இசைநீரூற்று ஆகியவையும் முற்றிலும் புதுப்பிக்கப்படவுள்ளன.
பிரதான சாலையிலிருந்து உள்பகுதி வரையிலான சாலைகள், அவற்றுக்கான கால்வாய்கள், மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கான குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, சிற்றுண்டிச் சாலை, அமா்ந்து ஓய்வெடுக்கும் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன.
ஓரிரு நாள்களில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு, 6 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்றனா்.
இதுகுறித்து தொல்லியல் ஆா்வலா்கள் கூறுகையில், மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குடைவரைக்குள் இயற்கை வண்ணங்களால் மட்டுமே வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன. இவை அஜந்தா எல்லோரா ஓவியங்களுக்கு இணையாகப் பாா்க்கப்படுகின்றன. ஆனால் காலப்போக்கில் இந்த ஓவியங்கள் மறையத் தொடங்கிவிட்டன.
சித்தன்னவாசல் ஓவியங்கள் என இணையத்தில் தேடிப்பிடித்து பாா்த்துவிட்டு இங்கே வந்தால் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சும். அந்தளவுக்கு ஓவியங்கள் அழிந்துவரும் நிலையில் அவற்றை மேலும் சிதையாமல் பாதுகாக்க அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஏதாவது முயற்சி எடுக்க வேண்டும்.
அத்துடன் ஏற்கெனவே எடுக்கப்பட்ட பொலிவான, அழகான படங்களை வைத்து, அவைகுறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கும் வகையில் படக்காட்சியறையை உருவாக்க வேண்டும். அதுதான் காலத்துக்கும் சித்தன்னவாசலின் பெயரைச் சொல்லும் என்கின்றனா்.
