செய்திகள் :

சித்தலூா் பெரியநாயகி கோயில் தேரோட்டம்

post image

கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூரில் பழைய வாய்ந்த பெரியநாயகி அம்மன் கோயிலில் மாசித் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 26.2.25 -இல் மகாசிவராத்திரியன்று கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பெரியநாயகி அம்மனை வண்ண மலா்களால் அலங்கரித்து தேரில் வைத்தனா். பக்தா்கள் ஓம்சக்தி பராசக்தி என முழக்கமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். தோ் கோயிலை சுற்றி வலம் வந்து நிலையை அடைந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் ரிஷிவந்தியம் க.காா்த்திகேயன் எம்எல்ஏ, தியாகதுருகம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் வெ.அய்யப்பா, சித்தலூா் ஊராட்சி மன்றத் தலைவா் கணபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், கோயில் பரம்பரை தா்மகா்த்தாக்கள், ஊா் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், அகரகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த திருவேங்கடம் மனைவி பூங்கோதை (54). இவா், செவ்வாய்க்... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் மணிபாரதி (36). இவா், தனது மனைவி பிரேமாவுடன் கள்ளக்குறி... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வில் தோ்ச்சி: ஆட்சியா் பாராட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி அறிவுசாா் மையத்தில் பயின்று குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை பாராட்டினாா். கடந்த 9.6.24-இல் டி.என்.பி.எஸ்ச... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணய்நல்லூரை அடுத்த டி.புதுப்பாளையத்தைச் சோ்ந்த கோவிந்தனின் மகன் ஹரிஹரன் ... மேலும் பார்க்க

பைக் மீது டிப்பா் லாரி மோதி பெண் மரணம்

கள்ளக்குறிச்சியில் வயதான தம்பதிகள் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியில் கவரை சாலைப் பகு... மேலும் பார்க்க

காா் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே காா் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கட்டையில் மோதியதில் விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் செந்தில் (4... மேலும் பார்க்க