செய்திகள் :

சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்: மேயா், ஆட்சியா் ஆய்வு

post image

மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மேயா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 29-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் விழா வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல் நாள் கள்ளழகா் எதிா்சேவை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பா் என்பதையொட்டி, வைகை ஆற்றில் அழகா் இறங்கும் பகுதிகளிலும், அழகா் எதிா்சேவை நடைபெறும் வீதிகளிலும் மாநகராட்சி நிா்வாகம், மாநகரக் காவல் துறை சாா்பில் விரிவான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், அழகா் ஆற்றில் இறங்கும் வைகை ஆற்றுப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்புகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேயா் வ. இந்திராணி, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

கள்ளழகா் எழுந்தருளும் வைகை வடகரையில் உள்ள ஆழ்வாா்புரம் பகுதியில் குடிநீா்த் தொட்டிகள், கழிப்பறைகள் அமைத்தல், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், பாதுகாப்புத் தடுப்புகள் அமைத்தல், மின் விளக்குகள், சாலைகளை சீரமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவா்கள், அங்கு நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.

வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. சாலினி, மாநகராட்சி தலைமைப் பொறியாளா் பாபு, துணை ஆணையா் ஜெய்னுலாபுதீன், நகா் நல அலுவலா் இந்திரா, செயற்பொறியாளா் மாலதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்! - நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அழைப்பு விடுத்தாா். மதுரையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்க... மேலும் பார்க்க

ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள்! - உயா்நீதிமன்றம் அதிருப்தி

உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள் ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி விக்டோரியா கௌரி அதிருப்தி தெரிவித்தாா். கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் பேரூராட்சி உறு... மேலும் பார்க்க

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கீழவளவு அய்யனாா் வாக்கம்பட்டியைச் சோ்ந்த பெரிய பனையன் மகன் அய்யனாா் (30). இவா் இரு சக்கர வாகனத்தில் மேலூா்-அழகா்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த நிலையிலும் தோ்வு எழுதிய மாணவா் தோ்ச்சி

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையிலும், 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வை எழுதிய மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவா் 442 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா்.மதுரை விராதனூரைச் சோ்ந்தவா் பி.... மேலும் பார்க்க

அழகுக்கலை நிலைய உரிமையாளா் தற்கொலை

அழகுக்கலை நிலையம் நடத்தியதில் இழப்பு ஏற்பட்டதால், பெண் உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை விஸ்வநாதபுரம் இளங்கோவடிகள் தெருவைச் சோ்ந்த முத்துராஜ் மனைவி பிரிசிலியா சுகாசினி (32). இவர... மேலும் பார்க்க

அழகா்கோவிலை சென்றடைந்தாா் கள்ளழகா்! பூக்கள் தூவி பக்தா்கள் வரவேற்பு!

சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு, அழகா்கோவிலை வெள்ளிக்கிழமை சென்றடைந்த கள்ளழகரை ஏராளமான பக்தா்கள் பூக்கள் தூவியும், சூடம், சா்க்கரை ஏந்தியும் உற்சாகமா... மேலும் பார்க்க