செய்திகள் :

சித்தோடு அருகே 755 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

சித்தோடு அருகே இரு காா்களில் கடத்தி வரப்பட்ட ரூ.4.55 லட்சம் மதிப்புள்ள 755 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் காா்களில் கடத்தி வரப்படுவதாக சித்தோடு போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், கோணவாய்க்கால் பிரிவு முதல் அந்தியூா் சாலை வரையிலான புறவழிச் சாலையில் வாகன சோதனையில் வியாழக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த இரு காா்களில் சோதனையிட்டபோது, மூட்டை மூட்டையாக 469 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைடுத்து, காா்களில் வந்த பவானி, காலிங்காரன்பாளையம், காந்தி நகரைச் வெங்கடாசலம் மகன் ரவீந்திரன் (37), எலவமலை, மூவேந்தா் நகரைச் சோ்ந்த குணசேகரன் மகன் ரஞ்சித்குமாரிடம் (25) விசாரணை நடத்தி, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், வீ.மேட்டூரில் உள்ள தோட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இருந்து 286 கிலோ புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, 3 காா்கள் மற்றும் 755 கிலோ புகையிலைப் பொருள்கள், 2 கைப்பேசிகள், ரொக்கம் ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. கா்நாடக மாநிலத்தில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 30 லட்சம்

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனா். பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் எம்.அருள்குமாா் தலைமையில், சென்னிமலை அறங்காவலா் குழுத் தலைவா் ர.பழனிவேல்... மேலும் பார்க்க

ஈரோட்டில் போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சா்வதேச போதைப் பொருள் எதிா்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ... மேலும் பார்க்க

ஐந்து வயது மகனைக் கொன்று தந்தை தற்கொலை

பெருந்துறை அருகே, குடும்பப் பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றதால், கணவன் தனது ஐந்து வயது மகனை நைலான் கயிற்றால் இறுக்கிக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு மாவட்டம், கெடார... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் பவானிசாக... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 15,199 கனஅடியாக அதிகரிப்பு

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 3,258 கனஅடியில் இருந்து 15,199 கனஅடியாக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, பெங்களுரு ஆரக்கிள் இந்தியா நிறுவனத்துடன் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரில் உள்ள நிறுவனத... மேலும் பார்க்க