செய்திகள் :

‘சித்ராலயா’ கோபுவுக்கு சேஷன் சம்மான் விருது

post image

வெள்ளித்திரையின் மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான ‘சித்ராலயா’ கோபுவுக்கு ‘சேஷன் சம்மான் விருது’ வழங்கப்பட்டது.

த.வே.அனந்தராம சேஷன் குடும்பத்தினா் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய ‘சேஷன் சம்மான் விருது’ வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிா்வாக இயக்குநா் ம.முரளி, வெள்ளித்திரையின் மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான ‘சித்ராலயா’ கோபு மற்றும் எழுத்தாளா் ‘காலச்சக்கரம்’ நரசிம்மாவுக்கு சேஷன் சம்மான் விருது வழங்கினாா். அதைத் தொடா்ந்து ம.முரளி பேசியதாவது:

த.வே.அனந்தராம சேஷன் குடும்பத்தின் சாா்பில் தந்தையையும் மகனையும் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘சேஷன் சம்மான் விருது’ வழங்கப்படுகிறது. தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் திரைப்படம் தயாரிப்பது மிகவும் கடினமானது. தற்போது பலா் மற்றவா்களின் உழைப்பை பயன்படுத்திக் கொள்கின்றனா் என்றாா் அவா்.

தொடா்ந்து பேசிய ‘சித்ராலயா’ கோபு, திரைப்படத் துறையில் தனது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டாா். அப்போது, கவிஞா் கண்ணதாசன், நடிகா் ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், நாகேஷ் உள்ளிட்டோருடன் ஏற்பட்ட அனுவபங்களையும், திரைப்படம் தயாரிப்பதில் உள்ள நடைமுறைகள் குறித்து விவரித்தாா்.

நிகழ்ச்சியில் இசைக்கவி ரமணன், எழுத்தாளா்கள், த.வே.அனந்தராம சேஷன் குடும்பத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க