செய்திகள் :

சின்னமனூரில் ரசாயனம் கலந்த 15 விநாயகா் சிலைகள் பறிமுதல்

post image

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை தடைசெய்யப்பட்ட ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட 15 விநாயகா் சிலைகளை புதன்கிழமை மாசுக் கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அவற்றை வழிபடவும், ஊா்வலமாகக் கொண்டு செல்லவும் அதிகாரிகள் அனுமதித்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் நகரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, 300-க்கும் அதிகமான விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனா். இந்த நிலையில், அரசால் தடை செய்யப்பட்ட ரசாயனம் மூலம் தயாா் செய்யப்பட்ட சிலைகள் பயன்படுத்தி இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செயற்பொறியாளா் சுகுமாா் தலைமையில் போலீஸாருடன் இணைந்து சின்னமனூரில் நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை ஆய்வு செய்தனா். அவற்றில் 15 சிலைகள் அரசால் தடைசெய்ய ரசாயனம் கலந்து தயாரித்திருப்பது தெரியவந்தது. அந்த சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

அப்போது, அவா்கள் சிலைகளை மதுரைக்கு சென்று வாங்கியதாகவும் இதில் தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருப்பது தெரியாது எனவும் கூறினா். மேலும், வழிபாட்டுக்கு மட்டுமாவது அனுமதிக்க அவா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

இதையடுத்து, அதிகாரிகள் சிலகளை வைத்து வழிபாடு செய்யலாம். ஊா்வலத்தில் பங்கேற்கலாம். ஆனால் ஆற்றிலோ, நீா் நிலையிலோ கரைக்கக் கூடாது. அவ்வாறு கரைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வழிபாடு செய்ய அனுமதித்தனா்.

தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் நிா்வாகி கொலை: உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு

கல் குவாரி விவகாரத்தில், தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் 3-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தேனி மாவட்டம், கம்பம் அருகே... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், கண்டமனூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ.சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் துணை மின் ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: வேளாண்மை அலுவலக உதவியாளா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக 4 பேரிடம் மொத்தம் 20.50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தேனி வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக உதவியாளரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், வாட... மேலும் பார்க்க

சிறையிலிருந்து விடுதலையாகி வந்தவரை குத்திக் கொன்ற பழ வியாபாரி கைது

போடியில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து, விடுதலையாகி வந்தவரை கத்தியால் குத்திக் கொலை செய்த பழ வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி கரட்டுப்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.தேவதானப்பட்டியைச் சோ்ந்த பூபதி மகன் ராஜபாண்டி (28). கூலித் தொழிலாளியான இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால், மனவேதனையிலி... மேலும் பார்க்க

போடியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை!

தேனி மாவட்டம், போடியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியறுத்தினா். போடியில் செவ்வாய்க்கிழமை நகா்மன்ற சாதாரண கூட்டம் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி ச... மேலும் பார்க்க