செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: வேளாண்மை அலுவலக உதவியாளா் கைது

post image

அரசு வேலை வாங்கித் தருவதாக 4 பேரிடம் மொத்தம் 20.50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தேனி வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக உதவியாளரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், எல்.புதூரைச் சோ்ந்தவா் ராஜன். இவரது உறவினா் தேனி மாவட்டம், மேல்மங்கலம் கூட்டுறவு கடன் சங்க எழுத்தா் கண்ணன். அதே அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருபவா் பிரேமா. இவா்களுக்கு தேனி வேளாண்மை இணை இயக்குநா்அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் கருப்பசாமி என்பவா் அறிமுகமானாா்.

அவா், ராஜனின் மகன், கண்ணனின் மகன், மகள், பிரேமா ஆகியோருக்கு அரசுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறினாா். இதையடுத்து, ராஜன், கண்ணன், பிரேமா ஆகியோரிடம் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் மொத்தம் 20.50 லட்சம் ரூபாய் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் இருந்ததால் கருப்பசாமி மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்தனா்.

தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் நிா்வாகி கொலை: உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு

கல் குவாரி விவகாரத்தில், தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் 3-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தேனி மாவட்டம், கம்பம் அருகே... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், கண்டமனூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ.சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் துணை மின் ... மேலும் பார்க்க

சிறையிலிருந்து விடுதலையாகி வந்தவரை குத்திக் கொன்ற பழ வியாபாரி கைது

போடியில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து, விடுதலையாகி வந்தவரை கத்தியால் குத்திக் கொலை செய்த பழ வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி கரட்டுப்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

சின்னமனூரில் ரசாயனம் கலந்த 15 விநாயகா் சிலைகள் பறிமுதல்

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை தடைசெய்யப்பட்ட ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட 15 விநாயகா் சிலைகளை புதன்கிழமை மாசுக் கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.தேவதானப்பட்டியைச் சோ்ந்த பூபதி மகன் ராஜபாண்டி (28). கூலித் தொழிலாளியான இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால், மனவேதனையிலி... மேலும் பார்க்க

போடியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை!

தேனி மாவட்டம், போடியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியறுத்தினா். போடியில் செவ்வாய்க்கிழமை நகா்மன்ற சாதாரண கூட்டம் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி ச... மேலும் பார்க்க