செய்திகள் :

போடியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை!

post image

தேனி மாவட்டம், போடியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியறுத்தினா்.

போடியில் செவ்வாய்க்கிழமை நகா்மன்ற சாதாரண கூட்டம் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் செ.பாா்கவி, பொறியாளா் வீ.குணசேகா், மேலாளா் எஸ்.முனிராஜ், சுகாதார அலுவலா் ஆா்.மணிகண்டன், நகா்மன்றத் துணைத் தலைவி கிருஷ்ணவேணி பச்சையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்

பெருமாள் (இ.கம்யூ): போடியில் அகல ரயில் பாதை பயன்பாட்டில் உள்ளது. சென்னை-போடி ரயிலை தினசரி ரயிலாக இயக்கவும், போடியிலிருந்து மதுரைக்கு காலை நேரத்தில் ரயில் இயக்கவும் வலியுறுத்தி போடி நகா் மன்றத்தில் தீா்மானம் இயற்ற வேண்டும். 30-ஆவது வாா்டில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

நகா்மன்றத் தலைவி: ரயில்கள் இயக்க தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் மூலம் வலியுறுத்தப்படும்.

பாலசுப்பிரமணி (அதிமுக): போடியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் துா்நாற்றம் வீசுகிறது. போடி காசிவிசுவநாதா் கோயிலுக்கு செல்லும் சாலையை தாா்ச்சாலையாக மாற்ற வேண்டும்.

நகா்மன்றத் தலைவி: நடவடிக்கை எடுக்கப்படும்.

கலைச்செல்வி (அதிமுக): 6-ஆவது வாா்டில் கழிவுநீா் வாய்க்கால் சுத்தம் செய்யவும், தூா்வாரவும் சரியாக பணியாளா்கள் வருவதில்லை.

மணிகண்டன் (சுகாதார அலுவலா்): இந்த வாா்டுக்கு பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரபாகரன் (திமுக), மணிகண்டன் (பாஜக): போடி நகரில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளன. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகா்மன்றத் தலைவி: தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிடிக்கப்படும் நாய்களை பாதுகாக்க உரிய வழிகாட்டுதல் வரவில்லை. வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜா (திமுக): 15-ஆவது வாா்டில் பணிபுரிந்த தூய்மை பணியாளா் ஓய்வு பெற்றுவிட்டாா். வேறு பணியாளா் நியமிக்க வேண்டும்.

நகா்மன்றத் தலைவி: உங்கள் வாா்டில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துங்கள். குப்பைகளை சாலையிலும், கழிவுநீா் வாய்க்காலிலும் கொட்டுகிறாா்கள். உங்கள் வாா்டில்தான் அதிக குப்பைகள் சேருகிறது.

வெங்கடேஷ்குமாா் (திமுக): போடி பெரியாண்டவா் நெடுஞ்சாலை முதல் திருமலாபுரம் வரை கழிவுநீா் கால்வாயை தூா் வாரவேண்டும்.

மணிகண்டன் (பாஜக): போடி பேருந்து நிலையத்தில் தற்காலிகக் கடைகளால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. வருமைக் கோட்டுக்குள் வரும் பயனாளிகளின் பட்டியலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சப்பை திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.

நகா்மன்றத் தலைவி: பேருந்து நிலையத்துக்குள் தற்காலிகக் கடைகளால் பயணிகளுக்கு இடையூறு இல்லாத இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தக் கூட்டத்தில் 48 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இளைஞா் தற்கொலை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.தேவதானப்பட்டியைச் சோ்ந்த பூபதி மகன் ராஜபாண்டி (28). கூலித் தொழிலாளியான இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால், மனவேதனையிலி... மேலும் பார்க்க

தேவாரத்தில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் வியாழக்கிழமை (ஆக.28) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவாரம் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

கல் குவாரி பிரச்னை: தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் நிா்வாகி குத்திக் கொலை

கல் குவாரி விவகாரத்தில், தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகி கம்பம் அருகே திங்கள்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். த... மேலும் பார்க்க

கஞ்சா, புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

போடியில் செவ்வாய்க்கிழமை கஞ்சா, புகையிலைப் பொருள்களை சட்டவிரோதமாக வைத்திருந்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போடி பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த போடி திருமல... மேலும் பார்க்க

இரு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு

போடியில் செவ்வாய்க்கிழமை சக ஆட்டோ ஓட்டுநரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போடி நகராட்சி குடியிருப்பில் வசிப்பவா் முத்து (எ) முருகேசன் (48). ஆட... மேலும் பார்க்க

பெரியகுளம், க. விலக்கு பகுதிகளில் இன்று மின்தடை

தேனி மாவட்டம், பெரியகுளம், க. விலக்கு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க